மாஷா அமினி மரணம்.. ஈரானில் தீவிரமடையும் அரசுக்கெதிரான போராட்டம்.. பள்ளி மாணவ-மாணவிகள் கைது.!

ஈரானில் 22 வயது இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்ததைத் தொடர்ந்து அரசுக்கெதிரான போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்து 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிஜாப் கட்டாயத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அங்கு … Read more

நியூசிலாந்தில் உணவு தேடி கரை ஒதுங்கிய 500 ‘பைலட்’ திமிங்கலங்கள் உயிரிழப்பு..!

நியூசிலாந்தில் கரை ஒதுங்கிய 500 பைலட் இன திமிங்கலங்கள் உயிரிழந்தன. கடந்த வெள்ளிக்கிழமை சாத்தம் தீவுகளில் 250 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், நேற்று மீண்டும் 240  திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அங்குள்ள கடல் பகுதியில் வசிக்கும் வெள்ளை சுறாக்களால், மீட்புப்பணியில் ஈடுபடுவோரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதால், இறந்த திமிங்கலங்களை கடலுக்கு இழுத்து செல்லும் முயற்சி கைவிடப்பட்டது. நீரிழப்பால் திமிங்கலங்கள் உயிரிழக்கத் தொடங்கிய நிலையில், எஞ்சிய திமிங்கலங்கள் அவதியுறுவதை தடுக்கும் விதமாக, அவை கருணை … Read more

தலிபன்களால் சுடப்பட்டு 10 ஆண்டுகள்… – பாகிஸ்தானுக்கு மலாலா வருகை

இஸ்லாமாபாத்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு நீண்ட காலத்துக்குப் பின் பயணம் மேற்கொண்டிருக்கிறார். பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய். இவர் பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 15 வயதுச் சிறுமியாக இருந்தபோது, அவரை கடந்த 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், லண்டனில் உயர் சிகிச்சைக்காக சென்ற மலாலா உயர் தப்பினார். உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் … Read more

ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்த ஐ.நா.,சபை: எதிராக வாக்களித்த இந்தியா!

உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதில் இருந்தே, இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து நேட்டோ படையில் இணையவும் உக்ரைன் விருப்பம் காட்டி வருகிறது. ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை உக்ரைன் மீற முயற்சிப்பதால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வந்த நிலையில், அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. உக்ரைந் ரஷ்யா இடையேயான போர் … Read more

அயோடின் மாத்திரைகள் அணுகுண்டு தாக்குதலை தடுக்குமா? விற்பனை மும்முரம்

Potassium Iodide Atomic Attack: அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தற்போது பொட்டாசியம் அயோடைடை வாங்குவதில் மும்முரமாக உள்ளன, இதனால் அணுசக்தி தாக்குதல்களைத் தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. இது உண்மையா, ஏன் இந்த பரபரப்பு என்பதை தெரிந்துக்கொள்வோம்.  உக்ரைன்-ரஷ்யா போர், கொரியா தகராறு மற்றும் உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக பல நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. ரஷ்யாவும் அணுகுண்டு தாக்குதல் நடத்தலாம் என பலமுறை எச்சரித்துள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. … Read more

இந்து முறைப்படி இஸ்லாமியருக்கு இறுதிச்சடங்குகள்! சவுதி அரேபிய NRI குடும்பம் வருத்தம்

ஜெட்டா: NRI Last Ritual Confusion: இந்து முறைப்படி இஸ்லாமியர் ஒருவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்ற நிகழ்வு ஆச்சரியத்தையும், அதன் பின்னால் உள்ள காரணங்கள் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளன. சவுதி அரேபியாவில் பணியாற்றிய வெளிநாடு வாழ் இந்தியர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டதால் நிகழ்ந்த குழப்பம் இது. இறந்த இரண்டு என்.ஆர்.ஐ-களின் உடல்கள், இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன. அதில், கேரளாவுக்கு செல்ல வேண்டிய சடலம் உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுவிட்டது. ஆனால், கேரளாவை சென்றடைந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியருக்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, சடலம் … Read more

உக்ரைனில் ரஷ்யா சரமாரி ஏவுகணைவீச்சு.. உலக நாடுகள் கண்டனம்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது, ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் ஐராப்பாவின் மிக நீளமான பாலம் இரு தினங்களுக்கு முன்பு வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டது. இதில் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டிய நிலையில், அதனை உக்ரைன் மறுத்தது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா … Read more

இறந்து கரை ஒதுங்கிய 500-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்

நியூசிலாந்தின் சாத்தம் தீவு 800-க்கும் குறைவான மக்கள் வசிக்கும் தீவு ஆகும். இத்தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் ஏராளமான சுறாக்கள் இருப்பதால், இத்தீவு மிகவும் சவாலான பகுதியாகும். சாத்தம் தீவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சுமார் 250 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கின. இதனைத் தொடர்ந்து, இன்று அருகிலுள்ள பிட் தீவில் 240 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. சுறாக்களின் தாக்குதலினால் இந்தத் திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளன. இந்தத் தீவு நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால், உயிரிழந்த திமிங்கலங்களின் உடல்கள் … Read more

உக்ரைன் விவகாரம்: ஐ.நா.,வில் ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிப்பு

நியூயார்க்: உக்ரைனின் 4 பிராந்தியங்களை இணைந்ததைக் கண்டிக்கும் தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யாவின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்து வருகின்றன. 6 மாதங்களைத் தாண்டி போர் நடைபெற்று வருகிறது. இதனிடையே, போர் மூலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள … Read more

பெரு நாட்டில் 16 டன் போதைப் பொருட்கள் அமைச்சர் முன் தீ வைத்து எரிப்பு…

பெரு நாட்டில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட 16 டன் போதைப்பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. இவை கடந்த ,இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டு இருந்தன. போதைக் பொருட்களை மூட்டை மூட்டையாக கொண்டு சென்ற  பெரு நாட்டின் அதிகாரிகள் அதனை அமைச்சர் ஒருவர் முன்னிலையில் தீயில் போட்டு அழித்தனர். Source link