70 ஆண்டுகள் இங்கிலாந்து ராணியாக வலம் வந்த எலிசபெத் ராணி மறைவு – 10 நாட்களுக்கு பின் உடல் அடக்கம்

லண்டன்: இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகள் வலம் வந்த இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் 10 நாள் துக்கத்துக்குப் பின்னர் ராணியின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராணி எலிசபெத் மறைவையடுத்து இளவரசர் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராகி உள்ளார். இங்கிலாந்தில் கடந்த 70 ஆண்டுகாலமாக ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத்(96). முதுமை காரணமாக அவருக்கு உடல்நலக் … Read more

சீனாவில் புதிதாக 1,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங், உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 1,695 பேருக்கு … Read more

பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்- அன்டோனியோ குட்டரெஸ்

லாகூர், பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்து வரும் நிலையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெய்த கனமழை, வெள்ளம் அது தொடர்பான இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 1,391 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், கனமழை காரணமாக நாடு முழுவதும் 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கனமழை, வெள்ளத்தால் நிலைகுலைந்துள்ள … Read more

ஆன்லைன் ரம்மி வழக்கு: கோர்ட் நோட்டீஸ்| Dinamalar

புதுடில்லி:’ஆன்லைன் ரம்மி’ விளையாட்டை தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, இடைக்கால தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ‘ஆன்லைன் ரம்மி, போக்கர்’ போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்டத்தை 2020ல் தமிழக அரசு இயற்றியது. இதை ரத்து செய்யக் கோரி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு … Read more

கோஹினூர் வைரம் | கமீலாவை அலங்கரிக்க காத்திருக்கும் இந்தியாவின் பொக்கிஷம்

லண்டன்: ராணி இரண்டாம் எலிசெபத் அணிந்திருந்த கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் அடுத்து யாருக்கு செல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாம் எலிசெபத் மகாராணி, தனது 96வது வயதில் இயற்கை எய்தியுள்ளார். எலிசெபத் மறைவை அடுத்து, அந்நாட்டு மன்னராக சார்லஸ் இன்று முறைப்படி அறிவிக்கப்பட உள்ளார். அடுத்த மன்னர் யார் என்பது தெளிவாகிவிட்டாலும், ராணி எலிசெபத்தின் விலைமதிப்பற்ற கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் அடுத்து யாருக்கு செல்ல போகிறது … Read more

ராணியின் உடல் 19ல் அடக்கம்| Dinamalar

லண்டன்:பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96, நேற்று முன்தினம் காலமானதை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ், இன்று அதிகாரப்பூர்வமாக மன்னராக பொறுப்பேற்க உள்ளார். ராணியின் இறுதிச் சடங்கு வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரண்மனையில் அடுத்தடுத்து நடக்க இருக்கும் நிகழ்வுகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், முதுமை காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் காலமானார். ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள பால்மோரல் அரண்மனையில் அவரது உயிர் பிரிந்தது. … Read more

பாக்.,கிற்கு ஆயுதம் அமெரிக்கா ஒப்புதல் | Dinamalar

வாஷிங்டன்:பாகிஸ்தான் ராணுவத்திடம் உள்ள, ‘எப் – 16’ ரக போர் விமானங்களின் பராமரிப்பு திட்டத்துக்காக, 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை அளிக்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் உடைய, ‘எப் – 16’ ரக போர் விமானங்களை அமெரிக்கா 2016ல் பாகிஸ்தானுக்கு அளித்தது. இந்த போர் விமானங்களை, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கு விற்பனை செய்வதாக அமெரிக்கா தெரிவித்தது. இந்த முடிவுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், … Read more

“என் அன்புக்குரிய மம்மா”… – ராணி எலிசெபத் மறைவுக்கு பின் முதல் உரையில் சார்லஸ் உருக்கம்

லண்டன்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத் மறைவை அடுத்து, அந்நாட்டு மன்னராக சார்லஸ் நாளை முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறார். அதற்கு முன்னதாக இங்கிலாந்து மக்களுக்கு உரையாற்றினார். அதில், ராணி இரண்டாம் எலிசெபத் குறித்து உருக்கமாக பேசினார். தனது முதல் உரையில், “ஆழ்ந்த துக்கத்துடன் இன்று நான் உங்களிடம் பேசுகிறேன். மதிப்புக்குரிய ராணியும் என் அன்புக்குரிய தாயான இரண்டாம் எலிசெபத் எனக்கும் எனது குடும்பத்துக்கும் ஒரு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் இருந்தார். அவர் எங்கள்மீது செலுத்திய அன்பு, பாசம், வழிகாட்டுதலூக்காக … Read more

ராணுவ ஒத்துழைப்பு ஜப்பானுடன் ஒப்பந்தம்| Dinamalar

டோக்கியோ:பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா – ஜப்பான் நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐந்து நாள் அரசு முறைப் பயணத்தில் கிழக்காசிய நாடான மங்கோலியா பயணத்தை முடித்து விட்டு, நேற்று முன்தினம் ஜப்பானுக்கு சென்றார். அவருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் உயர் அதிகாரிகளும் வந்தனர். ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்த இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் 2 பிளஸ் 2 … Read more

இலங்கை அமைச்சரவை விரிவாக்கம்| Dinamalar

கொழும்பு:இலங்கை அமைச்சரவையில் புதிதாக 37 பேர் இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். நம் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால், மக்கள் போராட்டம் வெடித்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய அமைச்சரவை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார். கடந்த மாதம் அவர் இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.இந்நிலையில், இலங்கை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.புதிதாக … Read more