மாஜி பிரதமர் இம்ரான் கான் உரையை 'லைவ்' செய்ய தடை: பாகிஸ்தான் அரசு அதிரடி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உரையை நேரலையாக ஒளிபரப்ப பாகிஸ்தான் ஊடக அமைப்பு தடை விதித்துள்ளது. இஸ்லாமாபாத் காவல் துறை அதிகாரி மற்றும் பெண் மாஜிஸ்திரேட்டை மிரட்டியதற்காக பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் (பிடிஐ) தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் நேரடி உரைகளை ஒளிபரப்ப பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக தொலைக்காட்சியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக இம்ரான் கானின் பிடிஐ கட்சி தலைவர் ஷாபாஸ் … Read more

பயங்கரவாத தாக்குதல்:10 பேர் பலி | Dinamalar

மொகடிஷு : சோமாலியாவில் ஹோட்டல் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில், பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 10 பேர் கொல்லப்பட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், குழந்தைகள், பெண்கள் உட்பட சிலரை மீட்டனர். ஆனால், பயங்கரவாதிகள் மேல்தளத்தில் பதுங்கி உள்ளனர். ‘ஹோட்டலில் எத்தனை பயங்கரவாதிகள் மறைந்துள்ளனர் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த சம்பவத்துக்கு, அல் – -ஷபாப் பயங்கரவாத … Read more

விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த மீட்புப் பணி ஊழியர்களுக்கு நேர்ந்த சோகம்..!

தென்கிழக்கு துருக்கியில் சாலை விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த மீட்புப் பணி ஊழியர்கள் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், 32 பேர் உயிரிழந்தனர். காஜியான்டெப் நகர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது மோதி சாலையோரம் கவிழ்ந்தது. இதில், 16 அவசரகால சுகாதார ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் உட்பட இரு விபத்துகளையும் சேர்த்து 32 பேர் உயிரிழந்த நிலையில், 29 பேர் காயமடைந்தனர். Source link

வெல்வாரா பிரக்ஞானந்தா: கார்ல்சனுடன் பலப்பரீட்சை| Dinamalar

மயாமி: சாம்பியன்ஸ் செஸ் தொடரின் கடைசி சுற்றில் இன்று உலக சாம்பியன் கார்ல்சன், பிரக்ஞானந்தா பலப்பரீட்சை நடத்துகின்றனர். ‘சாம்பியன்ஸ் செஸ் டூர்’ தொடரின் ஒரு பகுதியாக மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் தொடர் அமெரிக்காவின் மயாமியில் நடக்கிறது. நடப்பு உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, 17, உட்பட உலகின் முன்னணி வீரர்கள் 8 பேர் பங்கேற்கின்றனர். 7 சுற்றுக்கள் கொண்டது. ஒவ்வொரு சுற்று வெற்றிக்கும் தலா ரூ. 6 லட்சம் பரிசு கிடைக்கும். முதல் நான்கு சுற்றில் … Read more

அமெரிக்காவில் 2,500 பேர் பகவத் கீதை பாராயணம்| Dinamalar

அமெரிக்கா, டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகரில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் பங்கேற்ற பகவத் கீதை பாராயணம் நடைபெற்றது. ஸ்ரீ அவதூத தத்தா பீடம் சார்பில் ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா இந்த பகவத் கீதை விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒரு வாரம் நடைபெற்ற இந்த விழாவில் பகவத் கீதை முழுமையாக அனைவராலும் பாராயணம் செய்யப்பட்டது. வரலாற்று புகழ் பெற்ற இந்த கீதை சகஸ்ரகலா நிகழ்வில் ஆயிரத்து 500 சிறுவர், சிறுமியர் ஒரு வருடம் பயிற்சி செய்து … Read more

இரவு விடுதியில் நடனமாடிய விவகாரம் – பின்லாந்து பிரதமர் சானா மேரின் போதை மருந்து சோதனை

ஹெல்சின்கி: பின்லாந்து பிரதமர் சானா மேரின்(36) இரவு விடுதியில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு போதை மருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. வடக்கு ஐரோப்பாவில் பின்லாந்து அமைந்துள்ளது. அந்த நாட்டில் 55.3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். கடந்த 2019 டிசம்பர் 10-ம் தேதி பின்லாந்தின் 46-வது பிரதமராக சானா மேரின் பதவியேற்றார். விற்பனை பிரதிநிதியாக வாழ்க்கையை தொடங்கிய அவர் மிக இளம் வயதிலேயே நாட்டின் பிரதமராக உயர்ந்தார். கடந்த 2020 ஆகஸ்டில் … Read more

துருக்கி பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழப்பு| Dinamalar

இஸ்தான்புல் : துருக்கியில் உள்ள காசியான்டெப் மற்றும் நிசிப் இடையேயான நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளை நேற்று ஏற்றி சென்றது. அப்போது, சாலையில் கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் முயன்றபோது, பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று தீயணைப்பு வீரர்கள், இரண்டு டாக்டர்கள், இரண்டு பத்தரிகையாளர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்; 22 பேர் படுகாயமடைந்தனர்.துருக்கியில் மோசமான போக்குவரத்து காரணமாக, அதிக எண்ணிக்கையில் விபத்துகள் … Read more

ரஷ்ய படைகளை எதிர்கொள்ள 77.5 கோடி டாலர் மதிப்பில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிக்கிறது அமெரிக்கா

வாஷிங்டன்: ரஷ்ய படைகளை எதிர்கொள்வதற்காக, உக்ரைனுக்கு மேலும் 77.5 கோடி டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாட உதவிகளை அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முடிவு செய்ததால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர்தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய படைகள் இன்னும் தாக்குதலை தொடர்கின்றன. சுமார் 6 மாதங்களாக இரு நாடுகள் இடையே போர் நீடித்து வருகிறது. ரஷ்ய படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய … Read more

சோமாலியா ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் உயிரிழப்பு

மொகதிசு: சோமாலிய அரசுக்கு எதிராக அல்-ஷாபாப் என்ற தீவிரவாத குழுவினர் சுமார் 15 ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பு அல் கய்தா தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்நிலையில் மொகதிசுவில் உள்ள ஹயாத் ஓட்டலில் அல்-ஷாபாப் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் மாலை புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். குண்டுகளையும் வீசினர். இதையடுத்து ஓட்டலுக்குள் சோமாலிய ராணுவத்தினர் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், தீவிரவாதிகளின் தாக்குதலில் இதுவரை அப்பாவிகள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஓட்டலில் … Read more

இந்தியா – பாகிஸ்தான் போர் இரு நாடுகளுக்கும் நல்லதல்ல – பாகிஸ்தான் பிரதமர் கருத்து

இஸ்லாமாபாத்: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை மாணவ, மாணவியர் பாகிஸ்தானில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் பிரதமர் ஷாபாஸ் ஷெரீபை சந்தித்து பேசினர். அப்போது பிரதமர் ஷெரீப் கூறியதாவது: தெற்காசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்பதே பாகிஸ்தானின் விருப்பம். காஷ்மீர் பிரச்சினைக்கு போரின் மூலம் தீர்வு காண முடியாது. ஐ.நா. சபையின் தீர்மானங்கள், காஷ்மீர் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும். இந்தியா – … Read more