பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுமூன்று அமெரிக்கர்களுக்கு அறிவிப்பு| Dinamalar

ஸ்டாக்ஹோம் வங்கிகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து ஆய்வு செய்த மூன்று அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இலக்கியம்,அமைதி உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு, உலகின் உயரிய விருதான நோபல் பரிசு ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் விருதுகள் அறிவிக்கப்படும். டிசம்பர் மாதம் நடக்கும் நிகழ்வில் விருதுகள் அளிக்கப்படுகின்றன. பதக்கம் மற்றும் சான்றிதழுடன், 7.20 கோடி ரூபாய் ரொக்கமும் அளிக்கப்படுகின்றன. கடந்த 3ம் தேதி முதல் விருது பெற்றோர் … Read more

ரஷ்யா- கிரீமியா பாலத்தில் பயங்கரவாத தாக்குதல்: புடின் கண்டனம்| Dinamalar

மாஸ்கோ: கிரீமியாவில் பாலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என ரஷ்ய அதிபர் புடின் கண்டனம் தெவித்துள்ளார். ரஷ்யா – கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் 19 கி.மீ., துார கெர்ச் கடல் பாலம் நேற்று முன்தினம் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குலுக்கு இருதரப்பு ராணுவமும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், இது ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில், கிரீமியாவில் பாலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் ஆகும். குண்டுவெடிப்பு தாக்குதல் பின்னணியில் உக்ரைனின் சிறப்பு படைகள் இருக்கிறது. தங்கள் … Read more

உக்ரைனில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டது ஆழ்ந்த கவலை அளிக்கிறது – இந்தியா

உக்ரைனில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டது ஆழ்ந்த கவலை அளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா – கிரிமீயாவை இணைக்கும் பாலத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பிற்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றஞ்சாட்டிய நிலையில், கீவ் நகர் மீது ஏவுணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்நிலையில், இரு தரப்பும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதனிடையே, இந்தியர்கள் அவசியத் தேவையில்லாமல் உக்ரைனுக்கு செல்ல வேண்டாம் என்றும், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் … Read more

திக் திக் சம்பவம்… ஜஸ்ட் மிஸ்ஸில் தலை தப்பியது – லிஃப்டில் இதை மட்டும் செய்யவே செய்யாதிங்க!

10 மாடிகள் கொண்ட கட்டடத்தில் லிஃப்ட் பாதி வழியில் பழுதாகி நிற்பது, மின்தடையால் பலமணி நேரத்திற்கு லிஃப்ட் நிறுத்தப்படுவது போன்ற செய்திகளை அடிக்கடி காண முடியும். அதுபோல, மூடும் லிஃப்டின் கதவில் கை, கால்களை விட்டு மாட்டிக்கொள்வது போன்ற சம்பவங்களும் நடக்கின்றன. அந்த வகையில், ரஷ்யாவில் லிஃப்ட் ஒன்று கோளாறாகி, கதவை மூடாமலேயே திடீரென அடுத்த தளத்திற்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது. லிஃப்ட் ஒரு தளத்தில் நின்றுகொண்டிருந்தபோது, ஒருவர் அதில் இருந்து வெளியேறுகிறார், உடனே மற்றொருவர் லிஃப்டில் … Read more

பொதுத்தேர்தலுக்காக மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு – பிரதமர் இஸ்மாயில்

மலேசியாவில் பொதுத்தேர்தலை நடத்த ஏதுவாக, அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. மலேசிய மன்னரின் ஒப்புதலோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அடுத்த 60 நாட்களுக்குள், மலேசியாவில் 15வது பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில், பிரதமர் இஸ்மாயில் இந்த பொதுத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும், இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தேர்தல் செலவீனங்கள், பருவமழை … Read more

அமைச்சர் ஜெய்சங்கருக்கு மூவர்ணத்தில் வரவேற்பு அளித்த ஆஸ்திரேலியா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கேன்பெரா: நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆஸ்திரேலியாவின் கேன்பெரா நகருக்கு சென்றார். அங்கு அவருக்கு இந்தியாவின் மூவர்ணம் வெளிப்படும் வகையில் பார்லிமென்ட் இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். நியூசிலாந்தின் வெலிங்டனில் புதிய இந்தியத் தூதரக துணை அலுவலகத்தை திறந்து வைத்த அவர், நியூசிலாந்து வாழ் இந்திய வம்சாவளியினரிடம் … Read more

உக்ரைனின் கீவ் நகரில் ஏவுகணைகளை வீசி ரஷ்யா கடும் தாக்குதல்: 11 பேர் பலி; பலர் படுகாயம்

கீவ்: உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு நகரங்களின் மீது ஏவுகணைகளைக் கொண்டு கடும் தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. இந்தத் தாக்குதலில் இதுவரை சுமார் 11 பலியானதாகவும், 60-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்ததுள்ளது. இதனிடையே, உக்ரைன் நகரங்கள் மீது பதிலடி தாக்குதல் தொடரும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். “போரில் இது ஒரு புதிய கட்டம்” என உக்ரைன் நாட்டு பத்திரிகையாளர் ஸ்விட்லானா மோரிநெட்ஸ் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பின் தலைவரும் … Read more

‘எங்களை அழிக்க முயற்சி’ – உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல் குறித்து அதிபர் ஜெலென்ஸ்கி

ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த சில மாதங்களாக ஒப்பீட்டளவில் பெரிய அளவில் தாக்குதம் ஏதும் இல்லாத நிலையில், திங்களன்று உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட அதன் பல நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்தன. இதற்கிடையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது டெலிகிராம் கணக்கில், “ரஷ்யா எங்களை முழுவது அழிக்க முயற்சிக்கிறது” என்றும் உக்ரைனியர்கள் உறுதியாக நிற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். உக்ரைனின் உள்துறை அமைச்சக ஆலோசகர் ரோஸ்டிஸ்லாவ் ஸ்மிர்னோவ் இது குறித்து கூறுகையில், கியேவில் … Read more

Nobel Prize 2022: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு; தட்டித்தூக்கிய 3 அமெரிக்கர்கள்!

நோபல் பரிசு உலகின் உயரிய விருதாக கருதப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பை வழங்கும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நார்வே நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட நார்வே நோபல் கமிட்டியால் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பிரிந்துரைக்கப்பட்டவர்கள் பெயர் பட்டியல் நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வெளியிடப்படும். அந்த வகையில், 2022ம் ஆண்டு மருத்துவத்துக்கு நோபல் பரிசு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், அழிந்து … Read more

தேர்தலுக்கு ரெடி: மலேசிய பார்லி., கலைக்கப்பட்டது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோலாலம்பூர்: மலேசிய பார்லி., கலைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் இன்று(அக்.,10) அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும். பல்வேறு எதிர்ப்புகள், சிக்கலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், இஸ்மாயில் சப்ரி யாகூப் தலைமையிலான அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் சிலவும் கூட, இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து … Read more