Duvalius Dokovici: சிட்டாய் பறக்கும் பூச்சிக்கு நோவக் ஜோகோவிச் என பெயர்: செர்பியா

Novak Djokovic Beetle: செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச்சின் பெயரை, அந்நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வண்டுக்கு சூட்டியுள்ளனர். இந்தப் பூச்சியானது தரை வண்டுகளின் டுவாலியஸ் வகையைச் சேர்ந்தது. ஏன் வண்டுக்கு பிரபல டென்னிஸ் நட்சத்திரத்தின் பெயர் சூட்டப்பட்டது என்று அனைவருக்கும் கேள்வி எழுகிறது. அதற்கான விளக்கத்தையும் விஞ்ஞானிகள் தந்துள்ளனர். பூச்சியின் சுறுசுறுப்பு மற்றும் உறுதியான தன்மைக்காக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. டுவாலியஸ் டோகோவிசி (Duvalius Dokovici) என்று பெயரிட்டுள்ள விஞ்ஞானிகள், டென்னிஸ் நட்சத்திரம் சுறுசுறுப்பு மற்றும் உறுதியான தன்மைக்காக அறியப்படுபவர் … Read more

கிரீமியா பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்: உக்ரைனுக்கு எதிராக போரிட புதிய தளபதியை நியமித்தது ரஷ்யா

மாஸ்கோ: உக்ரைனின் கிரீமியா தீப கற்ப பகுதியை 2014-ம் ஆண்டில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதன்பின் 2018-ம் ஆண்டில் ரஷ்யாவையும் கிரீமியாவையும் இணைக்க கெர்ச் ஜலசந்தியில் 19 கி.மீ. தொலைவுக்கு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் வாகனங்கள் செல்ல 4 வழிச் சாலையும், இரட்டை ரயில் பாதையும் உள்ளன. நடுவில் கப்பல்கள் கடந்து செல்ல தூக்கு பாலம் வசதியும் உள்ளது. கடந்த 8-ம் தேதி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி பாலத்தில் வெடித்துச் சிதறியது. இதில் 3 … Read more

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து: ஜெர்மனிக்கு இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: பொறாமை மற்றும் பாகிஸ்தான் தூண்டுதலின் பேரிலேயே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலவல் புட்டோ ஜர்தாரி கடந்த 7-ம் தேதி 2 நாள் பயணமாக ஜெர்மனி சென்றிருந்தார். அங்கு ஜர்தாரியும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அன்னலினா பார்பாக்கும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது ஜர்தாரி கூறும்போது, “காஷ்மீரில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெறுவது கவலை அளிக்கிறது. இது … Read more

22 பேர் பலி; 50 பேர் மாயம்| Dinamalar

லாஸ் டெஜீரியாஸ்: மத்திய வெனிசுலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 22 பேர் வரை பலியாகி உள்ளதாகவும் 50 பேர் வரை மாயமானதாகவும் துணை அதிபர் டெல்சிரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: வெனிசுலாவின் அரகுவா மாநிலத்தில் உள்ள லாஸ் டெஜெரியாஸ் என்ற இடத்தில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 22 பேர் வரை பலியாகி உள்ளனர். 50 பேர் வரை மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த … Read more

உக்ரைனில் 17 பேர் பலி| Dinamalar

கீவ்-உக்ரைனின் ஸபோரிஸ்சியா பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில், பல அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்தன; 17 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துஉள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளான, உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்து வரும் போரில், உக்ரைனின் முக்கிய பகுதியான ஸபோரிஸ்சியா மீது, ரஷ்ய படையினர் கடந்த சில நாட்களாக தாக்குதலை அதிகரித்து வருகின்றனர். நாட்டின் மிக முக்கிய அணு உலை இந்த பகுதியில் இருப்பதால், இது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. ஸபோரிஸ்சியா … Read more

ரஷ்யா வீசிய கொடூர ஆயுதம்; கண்ணீரில் மிதக்கும் உக்ரைன்!

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கிய ரஷ்யா 8 மாதங்களாக அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யா படைகளின் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்களில் பலர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் தெற்கு உக்ரைனை சேர்ந்த ஜபோரி ஜியா நகரில் ரஷ்ய படைகள் திடீரென 7 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதிகாலையில் வீசப்பட்ட இந்த ஏவுகணைகள் நகர மையப் பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது. இந்த ஏவுகனை தாக்குதலில் 1 குழந்தை உள்பட 17 பேர் பலியானதாக … Read more

அரசு டிவியை முடக்கிய போராட்டக்காரர்கள்… ஈரானில் சம்பவம்!

பெண்கள் மற்றும 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் ஹிஜாப் உடையை அணிவது ஈரானில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆடையை முறையாக அணியவில்லை எனக் கூறி, மாஷா அமினி என்ற 22 வயது பெண்ணை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு சென்று மரணமடைந்தார். கடந்த மாதம் தலைநகர் தெஹ்ரானில் நிகழ்ந்த இக்கொடூர சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இளம் பெண்ணின் மரணத்தையடுத்து ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர. அவர்களின் இந்த போராட்டத்துக்கு … Read more

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள சென்டரஸ் மாலில் பயங்கர தீ விபத்து..!

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள சென்டரஸ் மாலின் 3வது மாடியில் இருக்கும் உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மீட்புக்குழுவினர் வர தாமதம் ஏற்பட்டதால் தீ மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியது. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். Source link

கிரிக்கெட்டை போல் ஒத்துழைப்பு: நியூசிலாந்தில் ஜெய்சங்கர் பேச்சு| Dinamalar

வெலிங்டன்:”கிரிக்கெட்டில் உள்ளது போன்ற சிறப்பான ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்பட அனைத்து துறைகளிலும் இருக்க வேண்டும்,” என, நியூசிலாந்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். நியூசிலாந்தின் வெலிங்டனில் புதிய இந்தியத் துாதரக துணை அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார்.இதைத் தொடர்ந்து நியூசிலாந்து வாழ் இந்திய வம்சாவளியினர் இடையே அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுக்கு எப்போதும் … Read more

'2671ஆம் ஆண்டில் இருந்து வருகிறேன்… பூமியின் தலையெழுத்தே மாறப்போகிறது' – ஏலியன்கள் படையெடுப்பா?

இணையத்தில் கொட்டிக்கிடக்கும் கோடிக்கடிக்கணக்கான தகவல்களில் பெரும்பாலானவைக்கு எந்தவித ஆதாரங்களோ அல்லது சாட்சிகளோ இல்லை. சமூக வலைதளங்களில் கூட திடீர் திடீரென நம்ப இயலாத பல தகவல்களும், செய்திகளும் உலா வருகின்றன. ஆன்மீகம் தொடர்பாக இருக்கட்டும், தேசிய பிரச்சனையாக இருக்கட்டும் உண்மைத்தகவல்களுடன் பல பொய் தககவல்களும், ஆதாரங்களற்ற தகவல்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது.  குறிப்பாக, ஏலியன்கள் குறித்த தகவல்கள், ஏலியன்கள் பூமியில் வசிப்பது போன்றவையும் அடிக்கடி சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்புகின்றன. அந்த வகையில், ட்விட்டரில் இதுபோன்ற ஒரு வீடியோ … Read more