பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து

புதுடெல்லி: 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தியாவின் முன்னேற்றத்தில் சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் திங்கள் கிழமை வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் முன்னேற்றம் வேகமெடுத்து வரும் இந்த சூழ்நிலையில், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்துக்கு அதிக முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துறைகளில் இந்தியாவின் முன்னேற்றம் உக்கமளிப்பதாக உள்ளது. இந்தப் பயணத்தில் … Read more

தலிபான் ஆட்சியின் ஓராண்டு நிறைவு: துயரத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்து ஓர் ஆண்டு ஆன நிலையில், அந்நாட்டில் நோயும், பசியும், துயரும் மட்டுமே நிறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் ஆப்கனில் ஆட்சியைப் பிடித்த தலிபான்கள், இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். இந்நிலையில், தங்களது ஓராண்டு ஆட்சி நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் தலைநகர் காபூல் தெருக்களில் மோட்டார் சைக்கிள்களில் நேற்று வலம் வந்தனர். அப்போது, ‘இஸ்லாம் … Read more

ஒமைக்ரான் தடுப்பூசி பிரிட்டன் அனுமதி| Dinamalar

லண்டன்: தற்போதைய கொரோனா பாதிப்புகளில் ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா தான் அதிகளவில் உள்ளது. இதை தடுக்கும் விதமாக பிரத்யேக தடுப்பூசியை அமெரிக்காவின் ‘மாடர்னா’ நிறுவனம் உருவாக்கியது. இதற்கு உலகின் முதல் நாடாக பிரிட்டன் நேற்று அனுமதி வழங்கியது. இதையடுத்து இத்தடுப்பூசி அங்கு ‘பூஸ்டர் டோஸ்’ஆக செலுத்தப்பட உள்ளது. லண்டன்: தற்போதைய கொரோனா பாதிப்புகளில் ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா தான் அதிகளவில் உள்ளது. இதை தடுக்கும் விதமாக பிரத்யேக தடுப்பூசியை அமெரிக்காவின் ‘மாடர்னா’ நிறுவனம் உருவாக்கியது. ஊடக தர்மம் … Read more

சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் எங்களுக்கு தொடர்பில்லை – ஈரான் அரசு திட்டவட்ட மறுப்பு

டெஹ்ரான்: ஈரான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நஸீர் கனானி நேற்று கூறியதாவது: அமெரிக்காவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (75) தாக்கப்பட்ட சம்பவத்தில் அவரையும், அவரது ஆதரவாளர்களையும் தவிர வேறு யாரும் பழி மற்றும் குற்றச்சாட்டுக்கு தகுதியானவர்கள் என்று நாங்கள் கருதவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் ஈரான் மீது குற்றச்சாட்டுகளை கூறும் உரிமை யாருக்கும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட சல்மான் ருஷ்டி மீது கத்தி குத்து … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பெருமிதம்| Dinamalar

வாஷிங்டன் : ”இந்தியாவும், அமெரிக்காவும் தவிர்க்க முடியாத நட்பு நாடுகள். மஹாத்மா காந்தி காட்டிய உண்மை, அஹிம்சை ஆகிய வழிகளில், இரு நாடுகளும், தங்கள் ஜனநாயக வெற்றிப் பயணத்தை தொடரும்,” என, இந்திய சுதந்திர தின விழாவுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, நாடு முழுதும் கொண்டாட்டங்கள் களைகட்டின. சர்வதேச நாடுகளின் தலைவர்களும், இந்திய சுதந்திர தின விழாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் … Read more

சல்மான் ருஷ்டியை தாக்கவில்லை: ஈரான் அரசு திட்டவட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் துபாய் : ‘எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலில், ஈரான் அரசுக்கு தொடர்பு இல்லை’ என, அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இந்திய வம்சாவளி எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, 75, ‘தி சட்டானிக் வெர்சஸ்’ என்ற நாவலை, 1988ல் வெளியிட்டார். இதற்கு, முஸ்லிம் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ருஷ்டியை படுகொலை செய்ய வேண்டும் என, அப்போதைய ஈரான் அதிபர் அயதுல்லா கோமேனி பகிரங்கமாக அறிவித்தார். ருஷ்டியை படுகொலை செய்ய … Read more

மியான்மர்: ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு 6 ஆண்டுகள் சிறை

யாங்கூன், மியான்மர் நாட்டில் ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ராணுவம் கைப்பற்றியது. மேலும், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது. ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஆங் சாங் சூகி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஆங் சான் சூகிக்கு மியான்மர் ராணுவ நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 77 … Read more

சர்வதேச ​விண்வெளி மையத்தில் இந்திய தேசியக்கொடி..!

வாஷிங்டன், நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, சர்வதேச விண்வெளி மையத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தை, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும் இந்திய அமெரிக்க விஞ்ஞானி ராஜா சாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தனது பூர்விக ஊரான ஹைதராபாத் நகரம், வண்ண விளக்குகளால் ஒளிரும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். தினத்தந்தி Related Tags … Read more

சுதந்திர தினத்தில் ஐரோப்பாவின் உயரமான மலைச்சிகரத்தில் தேசியக்கொடியை ஏற்றி சாதனை படைத்த இந்தியாவின் பாவனா டெஹாரியா!

லண்டன், இந்திய மலையேற்ற வீராங்கனையான பாவனா டெஹாரியா ஐரோப்பாவின் மிக உயரமான மலைசிகரமான எல்ப்ரஸ் மலையில், இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்டு சாதனை படைத்தார். மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள தமியா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் டெஹாரியா என்ற 30 வயதான பெண்மணி, ஆகஸ்ட் 15ம் தேதி(இன்று) மலைசிகரத்தை அடைய சரியாக திட்டமிட்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரஷியா-ஜார்ஜியா எல்லையில் அமைந்துள்ள ஐரோப்பாவின் 5,642 மீட்டர் உயரமான சிகரத்தில், கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் சுதந்திர தினத்தன்று … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா வழங்கிய இலவச சைக்கிளில் சவாரி செய்த மடகாஸ்கர் பிரதமர்! வைரல் வீடியோ

அண்டனானரிவோ [மடகாஸ்கர்], இந்திய தேசத்தின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் தோழமை நாடான மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை இந்தியா வழங்கியுள்ளது. மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் நாட்டின் இந்திய தூதர் அபய் குமார் மற்றும் மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே ஆகியோர் ஒன்றாக இந்த சைக்கிள்களை ஓட்டினர். இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் ஒன்றாக சைக்கிள் ஓட்டினர். அண்டனானரிவோவில் செயல்பட்டு வரும் மடகாஸ்கர் மற்றும் கொமோரோஸ் நாட்டுக்கான … Read more