உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகள்: முதலிடத்தில் ஜப்பான்; இந்தியாவுக்கு 87-வது இடம்

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் 87-வது இடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது விசா ஆன் அரைவல் முறையில் சென்றுவர முடிகிறது என்பதின் அடிப்படையில் பாஸ்போர்ட்டின் சக்தி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் ஜப்பான் பாஸ்போர்ட் மூலம் உலகம் முழுவதும் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நாட்டு பாஸ்போர்ட்டுகள் மூலம் … Read more

அதிபராக தேர்வான ரணிலுக்கு எதிர்ப்பு: மீண்டும் போராட்டக்களத்தில் மக்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கை அதிபராக தேர்வான ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், முதலில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருடைய சகோதரரும் அதிபராகவும் இருந்த கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறியதுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான … Read more

அமெரிக்காவுக்கு பதிலடி: ஈரானில் ரஷ்ய அதிபர் புதின்

தெஹ்ரான்: உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஈரானின் ஆதரவை பெறுவதற்காக ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். கடந்த பிப்ரவரியில் ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து தனது இரண்டாவது வெளிநாட்டு பயணமாக புதின் செவாய்க்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரான் சென்றிருக்கிறார். இப்பயணத்தில் புதின் ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். உலகளவில் நிலவும் உணவு நெருக்கடிகள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர். உக்ரைனில் ரஷ்ய போர் … Read more

தீப்பற்றி எரிந்த வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட 5 குழந்தைகளை உயிரை பணயம் வைத்து பத்திரமாக மீட்ட பீட்சா டெலிவரி ஊழியர்..!

அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில், பீட்சா டெலிவரி ஊழியர் ஒருவர், தீப்பற்றி எரிந்த வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட 5 குழந்தைகளை பத்திரமாக மீட்டார். 25 வயதான நிக்கோலஸ் போஸ்டிக் என்ற அந்த இளைஞர் நள்ளிரவில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிவதை கவனித்துள்ளார். உடனடியாக, பின் வாசல் வழியாக உள்ளே புகுந்த நிக்கோலஸ், தூங்கி கொண்டிருந்த 4 குழந்தைகளை கத்தி எழுப்பி வெளியே அழைத்து வந்துள்ளார். மேலும் ஒரு குழந்தை மாடியில் உறங்கிகொண்டிருப்பதாக அந்த குழந்தைகள் கூறவே, புகையை சுவாசிக்காமல் இருக்க சட்டையால் … Read more

உக்ரைன் போருக்குப் பின் முதன் முறையாக ஈரான் சென்றுள்ள ரஷ்ய அதிபர்; ஈரான் – ரஷ்யா இடையே 4,000 கோடி டாலர் மதிப்பில் ஒப்பந்தம்!

உக்ரைன் போருக்குப் பின் முதன் முறையாக முந்தைய சோவியத் ஒன்றித்தின் எல்லையை தாண்டி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஈரான் சென்றுள்ளார். தலைநகர் டெக்ரானில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி, அந்நாட்டின் தலைவர் அயதுல்லா காமேனி மற்றும் துருக்கி அதிபர் தயிப் எர்டோகன், ஆகியோரை புதின் சந்தித்துப் பேசினார். இதற்கிடையே ரஷ்யாவின் கேஸ்பிரோம் நிறுவனம் மற்றும் ஈரானின் தேசிய எண்ணெய் நிறுவனம் இடையே 4 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source … Read more

தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும் மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்கா

வாஷிங்டன்: தன்பாலின திருமண அங்கீகாரத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என்ற கவலைகளை போக்கும் விதமாக, அமெரிக்க பிரதிநிதிகள் சபை, ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதர்கு கூட்டாட்சி பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியது. திருமணத்திற்கான மரியாதைச் சட்டம் ஒரே பாலின திருமணங்கள் மற்றும் ஓரின விருப்பம் கொண்டவர்களின் அமைப்புகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும். நாட்டின் ஒரு மாகணத்தில் செய்யப்படும் இதுபோன்ற திருமணங்களை நாட்டின் பிற மாகாணங்களும் அங்கீகரிக்க வகை செய்யும் மசோதா இது … Read more

இந்தியாவில் வரும் அக்டோபரில் ஜஸ்டின் பீபரின் பாப் இசை கச்சேரி…!! ரசிகர்கள் உற்சாகம்

நியூயார்க், பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர் (வயது 28). ஜஸ்டிஸ் உலக சுற்றுலா என்ற பெயரில் பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாப் இசை கச்சேரிகளை நடத்தி வருபவர். உலகம் முழுவதும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஜூனில் இவருக்கு பக்கவாதம் ஏற்பட்ட விசயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால், டொரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு முன் ரசிகர்களுக்கு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் … Read more

Ranil Wickremesinghe: இலங்கை 8வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு

இலங்கை நாட்டின் புதிய அதிபராக, ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், அரசியலிலும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மக்களின் தீவிர போராட்டத்தைத் தொடா்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, பதவியை ராஜினாமா செய்தார். மேலும், மக்களின் போராட்டங்களுக்கு பயந்து, மாலத்தீவு நாட்டில் தஞ்சம் அடைந்த கோத்தபய ராஜபக்சே, தற்போது, சிங்கப்பூர் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளாா். இதை அடுத்து, மக்களின் … Read more

இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், முதலில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருடைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள அவர், அதிபர் பதவியிலிருந்து விலகினார். தற்காலிக அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் … Read more

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டி: இந்திய வம்சாவளி ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை

லண்டன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களம் இறங்கியதால் 2 இறுதி வேட்பாளரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் பல்வேறு கட்டங்களாக வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் நடந்த 2 சுற்று தேர்தல்களில் 3 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு, 5 வேட்பாளர்கள் அடுத்த … Read more