உலகின் முதல் பறக்கும் பைக் அமெரிக்காவில் அறிமுகம்| Dinamalar

வாஷிங்டன் : உலகில் முதன் முறையாக, பறக்கும் பைக்கை தயாரித்துள்ள ஜப்பான், அதை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகமயமாக்கலுக்குப் பின் சந்தைகளில் நவீன வாகனங்களின் அணிவகுப்பு தொடர்கிறது. தற்போது சந்தையில் தொடர்ச்சியாக அதிவேக பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மின்சாரம் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.கார் கடலில் செல்வதும், பைக் பறப்பதும் என ஹாலிவுட் சினிமாக்களில் கற்பனையான காட்சிகளைக் பார்த்து மகிழ்ந்திருப்போம்.‘பேட் மேன்’ என்ற படத்தில், பறக்கும் … Read more

ராணி எலிசபெத் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு: லண்டனில் குவிந்த உலகத் தலைவர்கள்!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (96) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8ஆம் தேதி காலமானார். ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் அவர் உயிர் பிரிந்ததாக, பக்கிங்ஹம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ராணி எலிசபெத் மறைவையடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக முடிசூடிக் கொண்டுள்ளார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்தால் அடுத்த நடக்க வேண்டிய திட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே … Read more

சிறிய ரக விமானங்கள் மோதல் அமெரிக்காவில் இருவர் பலி| Dinamalar

வாஷிங்டன் : அமெரிக்காவில் நடுவானில் இரண்டு சிறிய ரக விமானங்கள் மோதியதில், மூன்று பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தின் தலைநகரான டென்வர் நகரில் இருந்து, 48கி.மீ. தொலைவில் உள்ளது லாங்மோன்ட். இப்பகுதியில் நேற்று இரண்டு சிறிய ரக விமானங்கள் வானில் பறந்துகொண்டிருந்தன.ஒரு விமானத்தில் இரண்டு பேரும், மற்றொன்றில் ஒருவரும் இருந்தனர். அப்போது, திடீரென இந்த இரண்டு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கி விழுந்தன. இதில் மூன்று பேரும் உயிரிழந்தனர். இறந்தவர்கள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. வாஷிங்டன் … Read more

தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கப் படையினர் தைவானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடுவார்கள் – அதிபர் ஜோ பைடன்

தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கப் படையினர் தைவானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடுவார்கள் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் சீனா தைவான் மீது தாக்குதல் தொடுத்தால் அமெரிக்கா தலையிடுமா என்ற கேள்விக்கு ஆம் அமெரிக்கப் படைகள் அனுப்பி வைக்கப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் நடைபெறும் போரில் தலையிடுவது என்பது அமெரிக்க அரசு கொள்கையில் இல்லை என்று ஏற்கனவே வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. Source link

கூந்தலை வெட்டி பெண்கள் எதிர்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தெஹ்ரான்: ஈரானில் 22 வயது இளம்பெண், சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி அந்நாட்டு போலீசார் அடித்து கைது செய்தனர். போலீசாரின் தாக்குதலில் அப்பெண் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது ஹிஜாப்பை தீயிட்டு கொளுத்தியும், தங்களது கூந்தலை வெட்டியும் போராட்டம் நடத்தினர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் நாடு ஈரான். இந்நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது 1979ம் … Read more

பிரிட்டன் மகாராணியின் இறுதிச்சடங்கு பாரம்பரியங்கள்: பல நூற்றாண்டு சம்பிரதாயம்

லண்டன்: இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சவப்பெட்டியை லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு எடுத்துச் செல்லும் சடங்கு ஊர்வலங்கள், பின்னர் வின்ட்சரில் அவர் அடக்கம் செய்யப்படும் இடத்துக்கு எடுத்து செல்வது என ராணியின் பயணம், பிரிட்டிஷ் முடியாட்சியின் பண்டைய மரபுகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது. காலங்கள் மாறினாலும் தங்கள் மரபை மாற்றாமல் அரச குடும்பம் பல நூற்றாண்டு பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றுகிறது. பிரிட்டனின் ராயல் நேவி பணியாளர்கள், வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரை பீரங்கி வண்டியில் வைக்கப்பட்ட … Read more

அமெரிக்காவில் பிரதமரின் பிறந்த நாள் கொண்டாட்டம்

வாஷிங்டன் : அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் ௭௨வது பிறந்த தினத்தை கொண்டாடினர். பிரதமர் மோடியின் 72வது பிறந்த நாள் நேற்று முன்தினம் நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் பிரதமரின் பிறந்த நாளை கொண்டாடினர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் மற்றும் அமெரிக்கர்களும் பங்கேற்று பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். ”இந்தியா, உலகின் தலைமையாக மாறுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அரசு அடித்தளமிட்டது. அவரது … Read more

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை.!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கச்சா எண்ணெய்யை கடனுக்கு வழங்கும்படி பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில் வளைகுடா நாடுகளிடம் பாகிஸ்தான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் பாகிஸ்தானுக்கு கடனுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்து வந்தன. உஸ்பெகிஸ்தான் ஷாங்காய் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை மூன்று முறை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கச்சா … Read more

சீனாவில் பஸ் கவிழ்ந்து 27 பேர் பரிதாப பலி| Dinamalar

பீஜிங் : சீனாவில் பஸ் கவிழ்ந்த விபத்தில், 27 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர். நம் அண்டை நாடான சீனாவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிமீறல் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இங்குள்ள குயுஜு மாகாணத்தில் ௪௭ பயணிகளை ஏற்றிக்கொண்டு, நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று வேகமாகச் சென்றது.அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். 14 … Read more

புதிய விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரம்: விண்வெளியில் சீன வீரர்கள் நடை பயணம்

பீஜிங், சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைத்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளி நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது. அதன்படி ஷென் டாங், கை சுஹி ஆகிய 2 விண்வெளி வீரர்களும், லியு யாங் என்கிற வீராங்கனையும் கடந்த 5 மாதங்களாக விண்வெளியில் தங்கியிருந்து, ‘தியான்ஹே’ என பெயரிடப்பட்டுள்ள புதிய விண்வெளி நிலையத்தை அமைக்கும் இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விண்வெளி நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு … Read more