ரஷ்ய அதிபர் புடினுக்குடாக்டர்கள் அவசர சிகிச்சை?| Dinamalar

மாஸ்கோ:ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கடந்த 22ம் தேதி நள்ளிரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், டாக்டர்கள் மூன்று மணி நேரம் சிகிச்சை அளித்த பின் அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், புற்றுநோய் மற்றும், ‘பார்கின்சன்ஸ்’ நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அவரது உடலில் ஒருவித நடுக்கம் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதை, ரஷ்ய அதிபர் அலுவலகமான கிரெம்ளின் மாளிகை திட்டவட்டமாக மறுத்தது.இந்நிலையில், 22ம் தேதி இரவு, துாங்கிக் … Read more

தற்கொலை படை தாக்குதல் சோமாலியாவில் 11 பேர் பலி| Dinamalar

மொகாடிஷு:சோமாலியாவில் அரசு அலுவலகம் ஒன்றின் நுழைவாயிலில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில்ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதிகாரிகள் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்தபோது, மர்ம நபர் ஒருவர் தன்னிடமிருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில், பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ‘அல் – -ஷபாப்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மொகாடிஷு:சோமாலியாவில் அரசு அலுவலகம் ஒன்றின் நுழைவாயிலில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை … Read more

உலகின் மிக அரிய வகையானபிங்க் நிற வைரம் கண்டெடுப்பு| Dinamalar

லுவாண்டா:அங்கோலாவில், 170 காரட்டில் ‘லுலோ ரோஸ்’ எனப்படும், அரிய வகை ‘பிங்க்’ நிற வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஆப்ரிக்க நாடான அங்கோலாவில், ஏராளமான வைரச் சுரங்கங்கள் உள்ளன. இங்கு கிடைக்கும் வைரங்கள், சர்வதேச அளவில் மிகப் பெரும் தொகைக்கு விற்பனையாகின்றன. இந்நிலையில், அங்கோலாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லுலோ சுரங்கத்தில், அரிய வகை பிங்க் நிற வைரத்தை தொழிலாளர்கள் கண்டெடுத்தனர். இது குறித்து ‘லுகாபா டைமண்ட்’ நிறுவனம் கூறுகையில், ‘இந்த 170 காரட் வைரம், 300 ஆண்டு … Read more

மாஜி இலங்கை அதிபரின்விசாவை நீட்டித்தது சிங்கப்பூர்| Dinamalar

சிங்கப்பூர்:இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ‘விசா’வை, மேலும், 14 நாட்களுக்கு நீட்டித்து சிங்கப்பூர் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் மற்றும் மக்கள் போராட்டத்தால், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த மாதம் ஆசிய நாடான மாலத்தீவுகளுக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அவருக்கு, 14 நாட்கள் விசா வழங்கியது சிங்கப்பூர் அரசு.இந்நிலையில், அவருடைய விசா மேலும், 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆக., 14 வரை … Read more

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – பதற்ற சூழல்..!

ஆப்கானிஸ்தானில் “மிசான் மாவட்டத்தில் இன்று நண்பகல் வேளையில் குழந்தைகள் குழு ஒன்று பொம்மை போன்ற பொருளைக் கண்டுபிடித்து, அதனுடன் விளையாடத் தொடங்கியது, திடீரென அது வெடித்ததில், இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்,” என்று ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சின்ஹுவாவின் கூற்றுப்படி, இறந்த இரண்டு உடல்களும் காயமடைந்த 10 குழந்தைகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறையின் மாகாணத் தலைவர் அப்துல் ஹக்கீம் ஹக்கிமி … Read more

கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூரில் விசா மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் விசாவை மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூர் அரசு நீட்டித்துள்ளது. அதன்படி அவர் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை சிங்கப்பூரில் தங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்சே அந்நாட்டிடம் புகலிடம் கோராமல் தங்கியிருந்தார். இந்த நிலையில், விசா அடிப்படையிலே தங்குவதற்கு ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 14 அன்று மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்சே நகரத்தின் … Read more

'Vogue' இதழ் அட்டைப் படங்களால் சர்ச்சையில் உக்ரைன் அதிபர்

‘வோக்’ இதழின் அட்டைப் படங்களில் உக்ரைன் போர்க் காட்சிகளை உலகிற்கு காண்பிக்கும் வகையில் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவியும் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் மாதம் வரவுள்ள வோக் இதழ் நேர்காணலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலனா நேர்காணல் இடம்பெற்றுள்ளது. அதில், தங்களது திருமண வாழ்வுமுதல் உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை வரையிலான தகவல்களை உணர்வூப்பூர்வமாக இருவரும் பகிர்ந்துள்ளதாக வோக் இதழ் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் இதற்கான முன்னோட்ட படங்களை வோக் அதன் … Read more

Viral Video: கடும் வெப்பத்தினால் பிளந்த பாலம்; அதிர்ச்சியூட்டும் வீடியோ

சீனாவில் கடுமையான வெப்பநிலை நிலவுவதாக கூறப்படும் நிலையில்,  கடுமையான வானிலை காரணமாக  பாலம் ஒன்று  பிளந்து இடிந்து விழும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நவ் திஸ் நியூஸ் (Now This News) ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவில் கடுமையான வெப்பம் காரணமாக கியான்ஜோ பாலம் பிளப்பத்தை சித்தரிக்கிறது. பாலம் சுமார் 20 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. பாலம் இடிந்த அன்று அது 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகி இருந்தது.இந்த வீடியோ ஜூலை … Read more

கூகுளில் 39 முறை விண்ணப்பித்து 40-வது முயற்சியில் வேலை: இது ஓர் இளைஞரின் விடாமுயற்சி வைரல் கதை

தன் கனவு நிறுவனத்தில் ஒரு வேலை. அதற்காக விடாமுயற்சியைக் கைவிடாமல் ஓர் இளைஞர் மேற்கொண்ட நடவடிக்கைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்தவர் டைலர் கோஹன். இவர் டோர்டேஷ் என்ற நிறுவனத்தில் ஸ்ட்ராட்டஜி அண்ட் ஆபரேஷன் பிரிவில் இணை மேலாளராக பணியாற்றி வந்தார். ஆனால், அவரின் இலக்கு எல்லாம் தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுளில் வேலை செய்ய வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது. ஆகையால் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனத்திற்கு விண்ணப்பித்துக் கொண்டே இருந்தார். கடைசியாக … Read more

காங்கோ: ஐ.நா. அமைதிப்படைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ; இந்திய வீரர்கள் 2 பேர் பலி

கின்ஷசா, மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சியாளர் குழுக்களும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகள் அந்நாட்டு மக்கள், அரசு படைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், காங்கோவில் அமைதியை நிலைநாட்டவும், அரசுப்படைகளுக்கு ஆதரவாகவும் ஐ.நா.வின் அமைதிப்படை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த அமைதிப்படையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், ஐ.நா. அமைதிப்படைகள், உள்நாட்டு படைகள் இருந்தபோதும் காங்கோவில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து … Read more