புர்கினா பாசோ நாட்டில் 34 பேர் சுட்டுக் கொலை| Dinamalar

ஒகடோகோ : புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், அப்பாவி மக்கள், 34 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில், சமீபகாலமாக அல் – குவைதா, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் அப்பாவி விவசாயிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்து உள்ளது. பயங்கரவாதிகள், விவசாயிகளை துரத்திவிட்டு, அவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர். இதையடுத்து, இந்தாண்டு ஜனவரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை நீக்கி விட்டு, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. எனினும், பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் குறையவில்லை. … Read more

இத்தாலியில் 70 ஆண்டுகளில் இல்லாத வறட்சி; 5 பிராந்தியங்களில் அவசர நிலை பிரகடனம்

ரோம், இத்தாலியில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான வறட்சி நிலையை அந்த நாடு எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக இத்தாலியின் மிக நீளமான நதியான போ நதியை சுற்றியுள்ள 5 வடக்கு பிராந்தியங்கள் வறட்சியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வறட்சியால் இத்தாலியின் 30 விழுக்காட்டுக்கும் கூடுதலான விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் விவசாயச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மேசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள லோம்பார்டி, … Read more

சிங்கப்பூர் அதிபருக்கு கொரோனா பாதிப்பு| Dinamalar

சிங்கப்பூர் : சிங்கப்பூரில், அதிபர், பார்லி., சபாநாயகர், ஒரு அமைச்சர் ஆகிய மூவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபரான ஹலிமா யாக்கோப், 67, தான், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தடுப்பூசி மற்றும் ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்திக் கொண்டதால், லேசான காய்ச்சல் அறிகுறிகளுடன் பாதிப்பு குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்த வாரம் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். சிங்கப்பூர் பார்லி., சபாநாயகர் டேன் சுவான்ஜினும், 53, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக … Read more

ரூ.489 கோடி செலவில் வர்ணம் பூசப்படுகிறது, ஈபிள் கோபுரம் துருப்பிடித்ததா?

பாரீஸ், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஸ்டாவ் ஈபிள் என்பவரால் கட்டப்பட்ட முற்றிலும் இரும்பினாலான இந்த கோபுரம் 1,063 அடி உயரம் கொண்டதாகும். உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலா தளங்களில் ஒன்றாக இந்த ஈபிள் கோபுரம் விளங்குகிறது. இந்த நிலையில் ஈபிள் கோபுரம் துருப்பிடித்து மோசமான நிலையில் இருப்பதாகவும், முழுமையான பழுதுபார்ப்பு தேவை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பழுதுபார்ப்புக்கு பதிலாக ஈபிள் … Read more

சர்வதேச நிதியத்திடம் அடுத்த மாதம் கடன் திட்டம் தாக்கல்- இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு, பேச்சுவார்த்தை வெற்றி கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில், பொருளாதார சிக்கலுக்கான தீர்வு குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று பேசினார். அவர் பேசியதாவது:- பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) கடன் பெற முயன்று வருகிறோம். சர்வதேச நிதியத்துடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்தது. கடன் திட்டம் இனிமேல், நாம் அளிக்கும் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை பொறுத்து, அடுத்தகட்ட நகர்வு இருக்கும். … Read more

சர்வதேச விமான சேவைக்கு சீனாவில் மீண்டும் அனுமதி| Dinamalar

பீஜிங் : இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச பயணியர் விமான சேவைக்கு, சீனா மீண்டும் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து, 2019ல் சர்வதேச பயணியர் விமான சேவைக்கு சீனா தடை விதித்தது. இந்நிலையில் சீனாவில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் சர்வதேச பயணியர் விமான சேவையை அனுமதிப்பதாக சீனா அறிவித்துள்ளது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தியுள்ள இந்தியா உடனான பயணியர் விமான சேவையை மீண்டும் அனுமதிப்பது குறித்து சீனா இன்னும் அறிவிக்கவில்லை. இந்தியாவைச் … Read more

டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை தாக்கிய புழுதிப் புயல்.!

ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் மோசமான புழுதிப் புயல் வீசியது. காற்றின் தரம் மோசமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு நடத்தும் தொலைக்காட்சி எச்சரிக்கை விடுத்தது. அதன்படி நேற்றைய தினம் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில் வங்கிகள் உள்ளிட்ட சேவைகள் மட்டும் இயங்கின. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஈரானை தாக்கிய நான்காவது மோசமான புழுதிப் புயல் இது என்றும் நாட்டின் மேற்கு மற்றும் ஈராக் எல்லை பகுதிகளில் அடிக்கடி இது … Read more

அமெரிக்காவில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் துப்பாக்கி சூடு: 6 பேர் உயிரிழப்பு| Dinamalar

ஹைலாண்டு பார்க் : அமெரிக்காவில் சுதந்திர தின விழா அணிவகுப்பின் போது மர்ம நபர் சுட்டதில், ஆறு பேர் உயிரிழந்தனர். நேற்று அமெரிக்காவின் 246வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாடெங்கும் கொண்டாட்டம் கொடி கட்டிப் பறந்தது. சுதந்திர தின விழா ஆனால், துரதிர்ஷ்டவசமாக இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரம் அருகே, சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் துப்பாக்கிச் சூடு நடந்தது.இங்கு, ‘ஹைலாண்டு பார்க்’ பகுதியில் சுதந்திர தின விழாவையொட்டி, கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த அணிவகுப்பை … Read more

new type of corona in india…இஸ்ரேல் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

என்னதான் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டிருந்தாலும், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பூசி செலுத்திய பிறகும், இந்தியாவில் கொரோனா எப்படி மீண்டும் பரவ தொடங்கியுள்ளது என்பது குறித்து இஸ்ரேல் விஞ்ஞானிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கொரோனா வைரசின் புதிய வடிவமான பிஏ 2.75 இந்தியாவில் பரவி இருப்பதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் இந்த வகை வைரஸ் வெளிநாடுகளில் … Read more

“உக்ரைனை மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவை” – அதிபர் ஜெலென்ஸ்கி

போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உக்ரைன் மீட்பு மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற ஜெலென்ஸ்கி, ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்ட முழு சேத விவரங்களையும், நாட்டின் தேவைகளையும் விவரித்தார். தொடர்ந்து பேசிய அவர், உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவது ஒரு நாட்டுடைய பணி அல்ல, உலக நாடுகளின் பொதுவான பணியாகும் என்று குறிப்பிட்டார். மேலும், உக்ரைனை மறுசீரமைப்பது உலகளாவிய அமைதிக்கான ஆதரவிற்கு மிகப்பெரிய … Read more