பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு – 5 பேர் பலி

பிலிப்பைன்ஸின் வடக்கு மாகாணமான ஆப்ராவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். லூசோன் தீவின் ஆப்ரா, தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியது. நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளும், 50-க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகளும் பதிவாகியதால் வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததோடு, … Read more

வீட்டிலேயே குட்டி விமானம் செய்துகுடும்பத்துடன் பறந்த கேரள இளைஞர்| Dinamalar

லண்டன்:பிரிட்டனில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த இளைஞர், கொரோனா ஊரடங்கின் போது வீட்டிலேயே உருவாக்கிய குட்டி விமானத்தில், குடும்பத்துடன் ஐரோப்பிய சுற்றுலா சென்று வந்துள்ளார். கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்தவர் அசோக் அலிசேரில் தமரக் ஷன், 38. இவர் அம்மாநில முன்னாள் எம்.எல்.ஏ., தமரக் ஷன்னின் மகன். இவர், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். முதுநிலை பட்டப்படிப்பு பயில்வதற்காக, 2006ல் லண்டன் சென்றவர் தற்போது, ‘போர்டு’ கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். … Read more

இந்திய சுற்றுலாப் பயணிகளை தவிர்க்கிறதா பூடான்?

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் பூடான் அரசு, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்து 200 ரூபாய் நிலையான அவிருத்தி வரி என்ற பெயரில் கூடுதல் வரியை விதித்துள்ளது. பிற நாட்டினருக்கு ஒரு நாளைக்கு 16 ஆயிரம் ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான பூடானுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் பாஸ்போர்ட் இல்லாமல் ஏதாவது ஓர் அடையாள அட்டையுடன் செல்லலாம். Source … Read more

119 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி| Dinamalar

போர்ட் ஆப் ஸ்பெயின்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் தவான், சுப்மன் கில் அரைசதம் விளாச, பந்துவீச்சில் கலக்கிய சாஹல் 4 விக்கெட் வீழ்த்த, 119 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய இந்திய அணி, தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றி முன்னிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி … Read more

ரஷ்ய அதிபர் புடினுக்குடாக்டர்கள் அவசர சிகிச்சை?| Dinamalar

மாஸ்கோ:ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கடந்த 22ம் தேதி நள்ளிரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், டாக்டர்கள் மூன்று மணி நேரம் சிகிச்சை அளித்த பின் அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், புற்றுநோய் மற்றும், ‘பார்கின்சன்ஸ்’ நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அவரது உடலில் ஒருவித நடுக்கம் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதை, ரஷ்ய அதிபர் அலுவலகமான கிரெம்ளின் மாளிகை திட்டவட்டமாக மறுத்தது.இந்நிலையில், 22ம் தேதி இரவு, துாங்கிக் … Read more

தற்கொலை படை தாக்குதல் சோமாலியாவில் 11 பேர் பலி| Dinamalar

மொகாடிஷு:சோமாலியாவில் அரசு அலுவலகம் ஒன்றின் நுழைவாயிலில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில்ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதிகாரிகள் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்தபோது, மர்ம நபர் ஒருவர் தன்னிடமிருந்த குண்டை வெடிக்கச் செய்தார். இதில், பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ‘அல் – -ஷபாப்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மொகாடிஷு:சோமாலியாவில் அரசு அலுவலகம் ஒன்றின் நுழைவாயிலில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை … Read more

உலகின் மிக அரிய வகையானபிங்க் நிற வைரம் கண்டெடுப்பு| Dinamalar

லுவாண்டா:அங்கோலாவில், 170 காரட்டில் ‘லுலோ ரோஸ்’ எனப்படும், அரிய வகை ‘பிங்க்’ நிற வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஆப்ரிக்க நாடான அங்கோலாவில், ஏராளமான வைரச் சுரங்கங்கள் உள்ளன. இங்கு கிடைக்கும் வைரங்கள், சர்வதேச அளவில் மிகப் பெரும் தொகைக்கு விற்பனையாகின்றன. இந்நிலையில், அங்கோலாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லுலோ சுரங்கத்தில், அரிய வகை பிங்க் நிற வைரத்தை தொழிலாளர்கள் கண்டெடுத்தனர். இது குறித்து ‘லுகாபா டைமண்ட்’ நிறுவனம் கூறுகையில், ‘இந்த 170 காரட் வைரம், 300 ஆண்டு … Read more

மாஜி இலங்கை அதிபரின்விசாவை நீட்டித்தது சிங்கப்பூர்| Dinamalar

சிங்கப்பூர்:இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ‘விசா’வை, மேலும், 14 நாட்களுக்கு நீட்டித்து சிங்கப்பூர் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் மற்றும் மக்கள் போராட்டத்தால், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த மாதம் ஆசிய நாடான மாலத்தீவுகளுக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அவருக்கு, 14 நாட்கள் விசா வழங்கியது சிங்கப்பூர் அரசு.இந்நிலையில், அவருடைய விசா மேலும், 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆக., 14 வரை … Read more

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – பதற்ற சூழல்..!

ஆப்கானிஸ்தானில் “மிசான் மாவட்டத்தில் இன்று நண்பகல் வேளையில் குழந்தைகள் குழு ஒன்று பொம்மை போன்ற பொருளைக் கண்டுபிடித்து, அதனுடன் விளையாடத் தொடங்கியது, திடீரென அது வெடித்ததில், இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்,” என்று ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சின்ஹுவாவின் கூற்றுப்படி, இறந்த இரண்டு உடல்களும் காயமடைந்த 10 குழந்தைகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறையின் மாகாணத் தலைவர் அப்துல் ஹக்கீம் ஹக்கிமி … Read more

கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூரில் விசா மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் விசாவை மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூர் அரசு நீட்டித்துள்ளது. அதன்படி அவர் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை சிங்கப்பூரில் தங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்சே அந்நாட்டிடம் புகலிடம் கோராமல் தங்கியிருந்தார். இந்த நிலையில், விசா அடிப்படையிலே தங்குவதற்கு ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 14 அன்று மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்சே நகரத்தின் … Read more