போர், வன்முறை பிரச்சினைகளால் உலகளவில் 3.6 கோடி குழந்தைகள் இடம் பெயர்வு – யுனிசெப் அமைப்பு தகவல்

நியூயார்க்: போர், வன்முறை, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல், பேரிடர்கள் போன்றவை காரணமாக 2021-ம் ஆண்டு இறுதி வரை உலகளவில் 3.6 கோடி குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 2-ம் உலகப் போருக்குப்பின் இது மிக அதிகமான அளவு என்றும் குழந்தைகளுக்கான ஐ.நா அமைப்பு யுனிசெப் தெரிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் இந்த எண்ணிக்கையில் 22 லட்சம் பேர் அதிகரித்தனர். இடம் பெயர்ந்த குழந்தைகளில் 1 கோடியே 37 லட்சம் பேர் அகதிகள். உள்நாட்டு சண்டை, வன்முறை ஆகியவை காரணமாக … Read more

எரிபொருள் பற்றாக்குறை எதிரொலிஇலங்கையில் வெள்ளி விடுமுறை| Dinamalar

கொழும்பு:நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரி பொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. பெட்ரோல், டீசல் வாங்க, மக்கள் இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு எரிபொருள் விநியோகிக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நிலுவை உள்ளது. அதனால் எண்ணெய் நிறுவனங்கள் இலங்கைக்கு பெட்ரோல், டீசல் சப்ளை செய்ய தயங்குகின்றன.இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளது.இதையடுத்து, … Read more

ஹிஜாப் அணியாத பெண்கள் மிருகம்ஆப்கனில் போஸ்டர் ஒட்டிய தலிபான்கள்| Dinamalar

காபூல்:’தலை முதல் கால் வரை மறைக்கும், ‘ஹிஜாப்’ அணியாத பெண்கள், மிருகங்களைப் போல தோற்றமளிக்க முயல்கின்றனர்’ என எழுதப்பட்ட ‘போஸ்டர்’களை, தலிபான்கள் ஆப்கனில் மக்கள் கூடும் இடங்களில் ஒட்டியுள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த தலிபான்கள், கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆட்சியை கைப்பற்றினர். கடந்த 1996 – 2001 ஆட்சியின் போது பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் தற்போது தொடராது என, தலிபான்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனாலும் அவர்களின் அடக்குமுறைகள் தொடர்ந்தன.இந்நிலையில், தெற்கு ஆப்கனில் … Read more

ஹிஜாப் அணியாத பெண்கள் மிருகம்; ஆப்கனில் போஸ்டர் ஒட்டிய தலிபான்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல்,-‘ஹிஜாப் அணியாத பெண்கள், மிருகங்களைப் போல தோற்றமளிக்க முயற்சிக்கின்றனர்’ என எழுதப்பட்ட ‘போஸ்டர்’களை, தலிபான்கள் ஆப்கனில் மக்கள் கூடும் இடங்களில் ஒட்டியுள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள், கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆட்சியை கைப்பற்றினர். அடக்குமுறை கடந்த 1996 – 2001 ஆட்சியின் போது பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் தற்போது தொடராது என, தலிபான்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனாலும் அவர்களின் அடக்குமுறைகள் தொடர்ந்தன. இந்நிலையில், தெற்கு ஆப்கனில் உள்ள … Read more

இந்தியாவுக்கு துணை நிற்போம்| Dinamalar

வாஷிங்டன்:’இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு நெருக்கமான உறவு ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன், இந்தியா – ரஷ்யா உறவு வலுப்பெற துவங்கிவிட்டது. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. இந்தியாவுக்காக அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும்’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து, ரஷ்யா மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி, ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இது, பொருளாதார ரீதியாக ரஷ்யாவை பாதித்துள்ளது.ஆனால், இந்த விவகாரத்தில் இந்திய … Read more

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி| Dinamalar

வாஷிங்டன்:அமெரிக்காவில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதி அளித்துள்ளது.இந்தியா உட்பட பல நாடுகளிலும், 12 வயதுக்கு மேற்பட்ட வயதினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட வில்லை.இந்நிலையில், அமெரிக்காவில், 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதி அளித்துள்ளது.இதில், … Read more

எரிபொருள் பற்றாக்குறைஇலங்கையில் வெள்ளி லீவு| Dinamalar

கொழும்பு:இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. பெட்ரோல், டீசல் வாங்க, மக்கள் இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு எரிபொருள் விநியோகிக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நிலுவை உள்ளது. அதனால் எண்ணெய் நிறுவனங்கள் இலங்கைக்கு பெட்ரோல், … Read more

வடகொரியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு.. மக்கள் குடல் தொற்று நோயால் பாதிப்பு..!

வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தொழிற்சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் பியாங்யாங்கில் உள்ள அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கவச உடை அணிந்து ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து, ஊழியர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டனர். வடகொரியாவில் சுமார் 4.5 மில்லியனுக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் கடந்த ஒரு வாரமாக ஏராளமானோர் குடல் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

ஜார்ஜியாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கண்ணாடிப்பாலம்.. பாலத்தின் நடுவே டைமண்ட் வடிவில் கட்டப்பட்டுள்ள உணவகம்..!

ஜார்ஜியாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கண்ணாடிப்பாலம் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. டேஷ்பாஷ் பள்ளத்தாக்கிற்கு நடுவே தரையில் இருந்து 200 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடிப்பாலம் 240 மீட்டர் நீளமுடையது. பாலத்தின் நடுவே டைமண்ட் வடிவில் அமைக்கப்பட்டுள்ள தொங்கும் உணவகத்திற்கு சென்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உணவருந்தி மகிழ்ந்து வருகின்றனர். Source link