'Vogue' இதழ் அட்டைப் படங்களால் சர்ச்சையில் உக்ரைன் அதிபர்

‘வோக்’ இதழின் அட்டைப் படங்களில் உக்ரைன் போர்க் காட்சிகளை உலகிற்கு காண்பிக்கும் வகையில் அதிபர் ஜெலன்ஸ்கியும், அவரது மனைவியும் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் மாதம் வரவுள்ள வோக் இதழ் நேர்காணலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலனா நேர்காணல் இடம்பெற்றுள்ளது. அதில், தங்களது திருமண வாழ்வுமுதல் உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை வரையிலான தகவல்களை உணர்வூப்பூர்வமாக இருவரும் பகிர்ந்துள்ளதாக வோக் இதழ் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் இதற்கான முன்னோட்ட படங்களை வோக் அதன் … Read more

Viral Video: கடும் வெப்பத்தினால் பிளந்த பாலம்; அதிர்ச்சியூட்டும் வீடியோ

சீனாவில் கடுமையான வெப்பநிலை நிலவுவதாக கூறப்படும் நிலையில்,  கடுமையான வானிலை காரணமாக  பாலம் ஒன்று  பிளந்து இடிந்து விழும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நவ் திஸ் நியூஸ் (Now This News) ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவில் கடுமையான வெப்பம் காரணமாக கியான்ஜோ பாலம் பிளப்பத்தை சித்தரிக்கிறது. பாலம் சுமார் 20 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. பாலம் இடிந்த அன்று அது 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகி இருந்தது.இந்த வீடியோ ஜூலை … Read more

கூகுளில் 39 முறை விண்ணப்பித்து 40-வது முயற்சியில் வேலை: இது ஓர் இளைஞரின் விடாமுயற்சி வைரல் கதை

தன் கனவு நிறுவனத்தில் ஒரு வேலை. அதற்காக விடாமுயற்சியைக் கைவிடாமல் ஓர் இளைஞர் மேற்கொண்ட நடவடிக்கைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்தவர் டைலர் கோஹன். இவர் டோர்டேஷ் என்ற நிறுவனத்தில் ஸ்ட்ராட்டஜி அண்ட் ஆபரேஷன் பிரிவில் இணை மேலாளராக பணியாற்றி வந்தார். ஆனால், அவரின் இலக்கு எல்லாம் தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுளில் வேலை செய்ய வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது. ஆகையால் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனத்திற்கு விண்ணப்பித்துக் கொண்டே இருந்தார். கடைசியாக … Read more

காங்கோ: ஐ.நா. அமைதிப்படைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ; இந்திய வீரர்கள் 2 பேர் பலி

கின்ஷசா, மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சியாளர் குழுக்களும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகள் அந்நாட்டு மக்கள், அரசு படைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், காங்கோவில் அமைதியை நிலைநாட்டவும், அரசுப்படைகளுக்கு ஆதரவாகவும் ஐ.நா.வின் அமைதிப்படை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த அமைதிப்படையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், ஐ.நா. அமைதிப்படைகள், உள்நாட்டு படைகள் இருந்தபோதும் காங்கோவில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து … Read more

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விலகும் ரஷ்யா

மாஸ்கோ: 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகி தங்களுக்கென்று ஒரு தனி விண்வெளி நிலையத்தை அமைக்க இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்யாவின் விண்வெளி அமைப்பின் தலைவர் யூரி பார்சோவ் கூறும்போது, “நாங்கள் 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விலக இருக்கிறோம். ஆனால் இருக்கும் காலக்கட்டத்தில் நாங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம். 2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்யாவுக்கென ஒரு விண்வெளி … Read more

ஐநா அமைப்புக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் ஐ.நா அமைதிப்படையைச் சேர்ந்த இந்திய வீரர்கள் 2 பலி.!

காங்கோவில், ஐநா அமைப்புக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் ஐ.நா அமைதிப்படையைச் சேர்ந்த  இந்திய வீரர்கள் 2 பேர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். காங்கோவில், பல வருடங்களாக தொடர்ந்து வரும்  போராளிகளின் வன்முறையில் இருந்து, பொதுமக்களை பாதுகாக்க ஐநா அமைப்பு தவறியதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதிப்படையைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த ஐநா அமைப்பின் பொதுசெயலாளர் ஆண்டனியோ குட்டரேஸ், வன்முறை குறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். Source link

பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

மணிலா, பிலிப்பைன்சின் அப்ரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என்று … Read more

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 பேர் பலி, கட்டிடங்கள் சேதம்

மணிலா: பிலிப்பைன்ஸில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர். பிலிப்பைன்ஸின் வடக்குப் பகுதியில் உள்ள தீவான அம்ராவில் இன்று (புதன்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக ஆக பதிவாகியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர்.கட்டிடங்கள் பலவும் சேதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட முழுமையான பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை … Read more

உலக நாடுகள் குரங்கு அம்மை பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனத்துடன் தகவல் பகிர வேண்டும் – சவுமிய சாமிநாதன்

ஜெனீவா, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- குரங்கு அம்மை பரவல் நமக்கு ஓர் எச்சரிக்கை மணி. நாம் எப்போதுமே வைரஸ் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். குரங்கு அம்மையானது குரங்கு அம்மை வைரஸால் உருவாகிறது. இது ஆர்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. ஒருவகையில் இது 1980களில் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரியம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸை ஒத்த பண்புகளைக் கொண்டது. பெரியம்மை தடுப்பூசிகளே குரங்கு அம்மைக்கு எதிராக … Read more

அமெரிக்காவில் செமிகண்டக்டர் சிப் ஆலை அமைக்கும் நிறுவனங்களுக்கு 5200 கோடி டாலர் ஊக்கத் தொகை வழங்க ஒப்புதல்!

அமெரிக்காவில் செமிகண்டக்டர் சிப் ஆலை அமைக்கும் நிறுவனங்களுக்கு 5200 கோடி டாலர் ஊக்கத் தொகை வழங்கும் சிப்ஸ் சட்ட மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவை ஒப்புதல் அளித்துள்ளது. சிப் தேவைகளுக்குத் தைவான், சீனா ஆகிய நாடுகளைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க இந்த நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது. இது குறித்துப் பேசிய வணிகத் துறை அமைச்சர் கினா ரைமண்டோ, தேசியப் பாதுகாப்புக் கருதிச் சிப் தயாரிப்புத் தொழிலை ஊக்குவிக்கப் பெருந்தொகை செலவிடப்படுவதாகத் தெரிவித்தார். சிப் தயாரிப்பில் ஆசியாவைச் சார்ந்திருக்கும் நிலையை … Read more