ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரிட்டன் உள்துறை ஒப்புதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன், விக்கிலீக்ஸ்’ ஜூலியன் அசாஞ்சேவை, – அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு பிரி்ட்டன் உள்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே, 51, ‘விக்கிலீக்ஸ்’ என்ற இணையதள பத்திரிகை வாயிலாக பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டார்.குறிப்பாக, அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது அமெரிக்காவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிரிட்டன் தலைநகர் லண்டனில், அசாஞ்சே கைது … Read more

எலான் மஸ்கின் டுவிட்டர் நடவடிக்கையை கண்டிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் – வெளியான அதிருப்தி கடிதம்..!!

வாஷிங்டன், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். உலகின் மிகப்பெரிய பணக்காரரர்களுள் ஒருவராக இருப்பவர். இவர் சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரின் 9.2% பங்குகளை எலான் மஸ்க் ஏற்கெனவே வாங்கிவிட்டார். பின்னர் ஒட்டுமொத்த டுவிட்டர் நிறுவனத்தையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாக மஸ்க் தெரிவித்தார். பின்னர் அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்முறையாக டுவிட்டர் நிறுவன ஊழியர்களிடம் எலான் மஸ்க் வீடியோ கால் வாயிலாக … Read more

அமெரிக்காவை வாட்டி வதைக்கும் கடும் வெப்பம்.. 2000 கால்நடைகள் பரிதாபமாக பலி..!

அமெரிக்காவின் கென்சாஸில் நிலவும் கடும் வெப்பத்தினால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் பல மாகாணங்களில் வரலாறுகாணாத அளவுக்கு கடும் வெப்பம் நிலவிவருகிறது. இதில் மாட்டிறைச்சி வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் கென்சாசும் ஒன்று. கடும் வெப்பத்தால் அங்கு பண்ணை புல்வெளிகளில் கால்நடைகள் உயிரிழந்து கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. புவி வெப்பமயமாதலால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். Source link

நேபாள ஆற்றில் மாயமான இந்திய சுற்றுலாப்பயணிகள் பத்திரமாக மீட்பு

காத்மாண்டு, இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள நேபாளத்திற்கு இந்திய சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் சென்று வருவது வழக்கம். அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் இருந்து சுற்றுலாப்பயணிகள் நேபாளம் சென்றனர். அவர்கள் நேபாளத்தின் பல்பா மாவட்டத்தில் உள்ள கலிகண்டகி ஆற்றில் சிறிய ரக படகு ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, படகு கவிழ்ந்ததில் 7 பேரும் நீரில் மூழ்கி மாயமாகினர். உடனடியாக உள்ளூர் … Read more

ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படலாம்: பிரிட்டன்

லண்டன்: ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு விசாரணைக்காக நாடு கடத்தப்படலாம் என பிரிட்டன் உள்துறைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க ராணுவம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதல் தொடர்பான ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியிட்டார் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. இதனால் விக்கிலீக்ஸ் மீது குற்ற விசாரணையை அமெரிக்கா தொடங்கியது. இதனிடையே, இங்கிலாந்தில் இருந்த ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி, அவருக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது ஸ்வீடன். இது அமெரிக்காவுக்கு நாடு … Read more

அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்ட ஜூலியன் அசாஞ்சேயை லண்டன் சிறையிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு..!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விக்கிலீக்ஸ் இணையத் தளம் மூலம் அமெரிக்க ராணுவ ரகசியங்களை 2010ஆம் ஆண்டு வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே 2012ஆம் ஆண்டு சுவீடனில் பதிவான பாலியல் வழக்கில் பிரிட்டனில் கைது செய்யப்பட்டார்.  Source link

இந்திய – அமெரிக்கா முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐக்கிய நாடுகள்: பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி அப்துல் ரெஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியா, அமெரிக்காவின் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள்படி தான் செய்துள்ளதாக கூறி தனது நடவடிக்கையை சீனா நியாயப்படுத்தி உள்ளது. மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவனான ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் அப்துல் ரெஹ்மான் மக்கி(74). … Read more

பயண கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தியது தாய்லாந்து; சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி

பாங்காக், உலக நாடுகளில் சுற்றுலாவாசிகளின் விருப்பமுள்ள நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து திகழ்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் அந்நாட்டிற்கு வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் 4 கோடி பேர் வருகை தந்தனர். ஆனால், அடுத்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவலால் இந்த எண்ணிக்கை சரிவடைய தொடங்கியது. கடந்த ஆண்டில், 2019ம் ஆண்டில் வருகை புரிந்த சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையில் ஒரு சதவீதத்தினரே வந்துள்ளனர். இத்தனைக்கும், கொரோனா விதிகள் பெருமளவில் தளர்த்தப்பட்டு இருந்தன. அந்நாட்டில் கொரோனா பெருந்தொற்றால் மொத்தம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை … Read more

விண்வெளியில் பூமியைப் போன்று 2 கோள்கள் இருப்பது கண்டுபிடிப்பு.. புகைப்படத்தை வெளியிட்ட நாசா..!

விண்வெளியில் பூமியைப் போன்று 2 கோள்கள் இருப்பதை நாசா ஆய்வு மையம் கண்டுபிடித்து அதன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு கோள்களும் மிகவும் அதிக வெப்பம் கொண்டவையாக இருக்கும் என்றும் பூமியில் இருந்து 33 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 கோள்களும் சூப்பர் எர்த் கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. HD 260655 b என்று பெயரிடப்பட்ட கோள் பூமியை விட 1.2 மடங்கும் HD 260655 c என்று பெயரிடப்பட்ட மற்றொரு … Read more

ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை செயலாளர் ஒப்புதல்

லண்டன் ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அமெரிக்க அரசாங்க ரகசிங்ககளை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். 50 வயதான ஜூலியன் அசாஞ்சே 2019 முதல் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தங்கி இருந்தார். உளவு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான உத்தரவில் இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரித்தி படேல் கையெழுத்திட்டுள்ளதாக உள்துறை … Read more