உக்ரைன் போரில் காயமடைந்த வீரர்களுக்கு பதக்கங்கள்.!

உக்ரைன் போரில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் வீரர்களுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தங்க பதக்கங்களை வழங்கும்  வீடியோவை ரஷ்ய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர், Sergei Shoigu, அவர்களுடன் கலந்துரையாடினார்.  Source link

இஸ்ரேலின் இடைக்கால பிரதமராக யயீர் லபிட் நியமனம்.!

இஸ்ரேலில் நப்தாலி பென்னட் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்த நிலையில், இடைக்கால பிரதமராக வெளியுறவுத்துறை அமைச்சர் Yair Lapid நியமிக்கப்பட்டுள்ளார். 8 கட்சிகளின் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை அடுத்து நாடாளுமன்றத்தில் ஆட்சி கலைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு, பிரதமர் நப்தாலி பென்னட் பதவி விலகினார். அக்டோபர் இறுதியில் 5-வது முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரை காபந்து அரசின் தலைவராக வெளியுறவுத்துறை அமைச்சர் Yair Lapid இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார். … Read more

சிலியில் நிறுவனம் தவறுதலாக அனுப்பிய 286 மாத ஊதிய பணத்துடன் தலைமறைவான ஊழியர்

சான்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலியில் கான்சார்சியோ இன்டஸ்டிரியல் டி அலிமென்டோஸ் (சியால்) நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர் ஒருவருக்கு மாத ஊதியம் 5,00,000 பெசோஸ் (சிலி நாட்டு கரன்சி) ஆகும். இந்திய மதிப்பில் ரூ.43 ஆயிரம். கடந்த மே மாதத்தில் அந்த ஊழியருக்கு தவறுதாக 286 மடங்கு ஊதியம் அவரது வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்டுவிட்டது. அதாவது 165,398,851 பெசோஸ்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.42 கோடி) வரவு வைக்கப்பட்டது. இதை … Read more

இலங்கை சட்டசபை தேர்தல்; இந்தியாவிடம் கோரிக்கை| Dinamalar

கொழும்பு-இலங்கையில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கான சட்டசபை தேர்தல்களை விரைவில் நடத்த அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அந்நாட்டை சேர்ந்த தமிழர் கட்சிகள் இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. கடந்த, 2018ல் இலங்கையில் தேர்தல் சீர்திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது எழுந்த சட்ட சிக்கல் காரணமாக ஒன்பது மாகாண சட்டசபை தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது வரை அந்த மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், அந்த ஒன்பது மாகாணங்களுக்கு உடனடியாக தேர்தல் நடத்த, … Read more

கணவரின் காம லீலைக்கு உதவி மனைவிக்கு 20 ஆண்டு சிறை| Dinamalar

நியூயார்க்:அமெரிக்காவில், ஏராளமான சிறுமியரை சீரழித்த நிதி நிறுவன அதிபருக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், அவர் மனைவிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் எப்ஸ்டீன், இவரது மனைவி கெவின் மேக்ஸ்வல். இருவருக்கும் அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள், மற்றும் வேறு பல நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் நெருக்கமான நட்பு இருந்துள்ளது.இதைப் பயன்படுத்தி, 17 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான சிறுமியர், பெண்கள் ஆகியோரை எப்ஸ்டீன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் … Read more

பாகிஸ்தானுக்கு சுமார் 2.5 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கும் சீனா

இஸ்லாமாபாத், அதிக பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு சரிவு, விரிவடையும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் பாகிஸ்தான் சிக்கித் தவித்து வருகிறது. இந்நிலையில் சீனா தனது அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க பாகிஸ்தானுக்கு 2.5 பில்லியன் டாலர் நிதி உதவியை வழங்குகிறது. இதனால் பாகிஸ்தானின் நிதி மற்றும் அதன் குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஜி20 டெப்ட் சர்வீஸ் சஸ்பென்ஷன் முன்முயற்சியின் (டிஎஸ்எஸ்ஐ) கீழ் 107 மில்லியன் அமெரிக்க … Read more

போலந்தில் ராணுவ தளம்: அமெரிக்கா அமைக்கிறது

மாட்ரிட்:உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதையடுத்து, போலந்து நாட்டில் நிரந்தர ராணுவ தளம் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் மாட்ரிட் நகரில், ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் மாநாடு நடந்து வருகிறது .மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேட்டோ பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கை சந்தித்து பேசினார்.பின்னர் ஜோ பைடன் கூறியதாவது:நேட்டோ வலுவானது மற்றும் ஒன்றுபட்டது. இம்மாநாட்டில் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைளால், எங்கள் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்கப் … Read more

குரங்கு அம்மை நோயை தடுக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பயன்படுத்த வேண்டும் – தென்னாப்பிரிக்கா சுகாதார அமைச்சகம்

ஜோகன்னஸ்பர்க், குரங்கு காய்ச்சலை தடுக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பயன்படுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்கா சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அந்நாட்டின் மேற்கு மாகாணத்தில் உள்ள கேப் டவுண் பகுதியில் வெளிநாட்டிற்கு செல்லாத ஒருவருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது. இது தொடர்பாக தென்னாப்பிரிக்க சுகாரதார அமைச்சர் ஜோ பாஹ்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை பரவுவதை தடுப்பது தொடர்பாக பயண கட்டுப்பாடுகள் விதிக்க பரிந்துரைக்கவில்லை என்றாலும் உள்ளூர் நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு குரங்கு அம்மை … Read more

செனகலில் படகு கவிழ்ந்து 13 பேர் பரிதாப பலி| Dinamalar

டாக்கர்:மேற்கு ஆப்ரிக்க நாடான செனகலில் இருந்து, ஐரோப்பாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், 13பேர் இறந்தனர்.மேற்கு ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் வறுமையும், வன்முறையும் அதிகரித்துள்ளன. இதனால், அந்நாடுகளில் இருந்த பலர் , ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைய, ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொள்கின்றனர்.இந்நிலையில், செனகலில் இருந்து 150க்கும் அதிகமான அகதிகளை ஏற்றிய படகு, ஐரோப்பா நோக்கி கடலில் சென்றது. செனகலின் கசாமான்ஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, படகு திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து, படகு கவிழ்ந்தது. தகவல் அறிந்து … Read more

இலங்கை வர்த்தக மந்திரி உடன் இந்திய தூதர் சந்திப்பு

கொழும்பு, இலங்கை தொழில் மந்திரி நலின் பெர்னாண்டோவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசினார். இதுகுறித்து இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இந்திய தூதர் இன்று தொழில் துறை மந்திரி நலின் பெர்னாண்டோவை சந்தித்தார். இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே வர்த்தக அளவை அதிகரிப்பது, வணிக இணைப்புகளை எளிதாக்குவதற்கான தளங்களை உருவாக்குவது போன்ற இருதரப்பு வர்த்தகத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி இருவரும் விவாதித்தனர்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த … Read more