இலங்கை அதிபர் மாளிகையில் லட்சக்கணக்கில் பணம் பதுக்கல்?| Dinamalar

கொழும்பு: இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள், அங்கு லட்சக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை கண்டுபிடித்து எண்ணுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இலங்கையில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வராததை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி, அதிபர் மாளிகைக்குள் லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் நேற்று நுழைந்தனர். முன்னெச்சரிக்கையாக வெளியேறிய அதிபர் கோத்தபய, வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே … Read more

எலான் மஸ்கின் ட்விட்டர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதா… உண்மை என்ன

உலக பணக்காரர்களில் ஒருவரான  எலான் மஸ்க் சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை $44 பில்லியனுக்கு வாங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.  ஆனால் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த முழு விவரங்களை அறிந்த பின்னரே இந்நிறுவனத்தை வாங்கப்போவதாகவும் எலான் மஸ்க் அறிவித்து டிவிட்டர் நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்தார்.   கடந்த வெள்ளிக்கிழமையன்று எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியை … Read more

பொது மக்கள் 15 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: உக்ரைனின் சசிவ் யார் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து ரஷ்யா ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியதில் 15 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். சசிவ் நகரில் சுமார் 12 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த நகரம் அமைந்துள்ள மாகாண கவர்னர், ரஷ்யா தொடர்ந்து ராக்கெட்கள் மூலம் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி … Read more

Thought Education: தலைவர்களின் மூளையை ஊடுருவ இயந்திரத்தை உருவாக்கியது சீனா

லண்டன்: மனிதர்களின் மூளையை அறியும் ஒரு விந்தையான இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவின் புதிய கண்டுபிடிப்பான இந்த செயற்கை நுண்ணறிவு சாதனம் தொடர்பான செய்தி வெளியாகி சர்வதேச அளவில் விவாதங்களை எழுப்பியிருக்கிறது. சரி, இந்த AI சாதனம் எதற்கு பயன்படும்?  மனிதர்களின் மனதை படிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவை (Artificial intelligence) உருவாக்கிவிட்டதாக சீனா கூறுகிறது. இது கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் மனதைப் படிப்பதற்காக உருவாக்கப்பட்டதாக சீனா கூறுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், தங்கள் கட்சிக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார் … Read more

தென் ஆப்ரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி| Dinamalar

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்க தலைநகர் ஜோகன்ஸ்பர்க் தென்கிழக்கே உள்ள சோவெட்டவின் அருகேயுள்ள ஆர்லாண்டோ மாவட்டத்தில் உள்ள மதுபான பாரில், திடீரென புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 12 பேர் சம்பவ இடத்திலும், 2 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்க தலைநகர் ஜோகன்ஸ்பர்க் தென்கிழக்கே உள்ள சோவெட்டவின் அருகேயுள்ள ஆர்லாண்டோ மாவட்டத்தில் உள்ள மதுபான … Read more

Galaxy Zoo project: 40 மில்லியனுக்கும் அதிகமான விண்மீன்களை வகைப்படுத்திய நாசா

Unusual Multi Armed Galaxy Merger: நாசாவின் கேலக்ஸி ஜூ திட்டம் பொதுமக்களின் பங்களிப்புடன் வானியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த தனித்துவமான திட்டத்தில் மக்கள் ஆர்வமுடன் பங்களித்து 40 மில்லியனுக்கும் அதிகமான விண்மீன்களை வகைப்படுத்தியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி CGCG 396-2 என்ற வித்தியாசமான விண்மீனைப் படம்பிடித்துள்ளது. அசாதாரணமான பல விண்மீன் இணைப்பு தொடர்பான விவரங்களை நாசா பகிர்ந்து கொண்டது.  ஹப்பிள் தொலைநோக்கி பதிவு செய்த விண்மீன், பூமியில் இருந்து 520 மில்லியன் ஒளியாண்டுகள் … Read more

கட்டுகட்டாகப் பணம், பதுங்கு குழி, இலங்கை அதிபர் மாளிகையை விட்டு வெளியேற மறுக்கும் போராட்டக்காரர்கள்: அடுத்தது என்ன?

கொழும்பு: நாங்கள் வறுமையில் வாட ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்தவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்துள்ளார்கள் என்று ஆவேசப்படும் போராட்டக்காரர்கள் ஒரு சுமுகத் தீர்வு வரும்வரை அதிபர் மாளிகையைவிட்டு வெளியேறப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். இலங்கையில் மக்கள் முன்னெடுத்த மிகப்பெரிய போராட்டத்தின் விளைவாக அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்தார். நாடே திரண்டு வந்ததுபோல் தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகையை நோக்கி நேற்று மக்கள் படையெடுக்க போலீஸும் ராணுவமும் செய்வதறியாது திகைத்தது. அதன் விளைவு பொதுமக்கள் அதிபர் … Read more

பாரில் நள்ளிரவு நிகழ்ந்த கொடூர சம்பவம்… நாட்டு மக்கள் அதிர்ச்சி!

தென்னாப்பிரிக்காவின் தலைநகர் ஜோகனஸ் பர்க்கிற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சோவெட்டோ நகரம். இந்த நகரின் ஆர்லாண்டோ என்ற இடத்தில் அமைந்துள்ள மதுக்கூடம் (பார்) அங்கு மிகவும் பிரபலம். எப்போதும் மதுபிரியர்களின் வருகையால் நிரம்பி வழியும் இந்த பாரில், நேற்று (ஜூலை 9) வார விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தைவிட அதிகமாக கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மதுபிரியர்கள் போதை மூழ்கி திளைத்துக் கொண்டிருந்தபோது, பாருக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் … Read more

சுற்றுலாத் தலம்போல மாறிய இலங்கை அதிபர் மாளிகை.!

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடியுள்ள நிலையில், பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலாத் தலம்போல மாளிகையின் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டுச் செல்வதுடன் அமர்ந்து உணவருந்திச் செல்கின்றனர்.  இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில் மக்களின் சினத்துக்கு ஆளான கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் அதையொட்டிய மைதானத்தில் இருந்து பாதுகாப்புப் படையினர் முற்றிலும் வெளியேறிவிட்டனர். இதனால் போராட்டம் நடத்தும் பொதுமக்களின் கட்டுப்பாட்டில் அதிபர் மாளிகை … Read more

இலங்கையில் மக்கள் போராட்டம் – அமைச்சர்கள் பதவி விலகல்

இலங்கையில் பொருளாதார நெருக்கடிச் சூழலில் மக்கள் போராட்டத்தையடுத்து அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே வரும் 13ஆம் தேதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அமைச்சர்கள் பலரும் பதவி விலகியுள்ளனர்.  இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்துகள் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் உள்ளது. மின்சாரம், எரிபொருள் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றுத் தலைநகர் கொழும்பில் திரண்ட மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அப்போது அங்குப் பாதுகாப்புக்கு நின்ற … Read more