இலங்கையில் பதற்றம் : அடுத்தடுத்து அமைச்சர்கள் விலகல்.. அடுத்த அதிபர் யார்?

இலங்கையில் நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அதிபர் பதவியில் இருந்து 13ந் தேதி கோத்தபய விலகுகிறார். தற்காலிக அதிபராக நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யப்பா அபேவர்தன செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அதிபர் கோத்தபயா பதவி விலகக் கோரி பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ அமைப்புகள், பொது மக்கள் மீது தண்ணீர் … Read more

நியூசிலாந்தில் நுழைந்தது, குரங்கு அம்மை நோய் பாதிப்பு

ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 55-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர். இந்த நோய் இப்போது நியூசிலாந்திலும் நுழைந்திருக்கிறது. அங்கு ஆக்லாந்தில் வசிக்கிற 30 வயதான ஒரு நபருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர் குரங்கு அம்மை நோய் தாக்கத்திற்கு ஆளாகியுள்ள வெளிநாடு ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பியவர் என தகவல்கள் கூறுகின்றன. இப்படி குரங்கு அம்மை பாதித்துள்ள நாடுகளுக்கு சென்று வந்தவர்கள், … Read more

55-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குரங்கு அம்மை நோயால் பாதிப்பு

வெலிங்டன், ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 55-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர். இந்த நோய் இப்போது நியூசிலாந்திலும் நுழைந்திருக்கிறது. அங்கு ஆக்லாந்தில் வசிக்கிற 30 வயதான ஒரு நபருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர் குரங்கு அம்மை நோய் தாக்கத்திற்கு ஆளாகியுள்ள வெளிநாடு ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பியவர் என தகவல்கள் கூறுகின்றன. இப்படி குரங்கு அம்மை பாதித்துள்ள நாடுகளுக்கு சென்று … Read more

இலங்கையில் உச்சகட்ட அரசியல் பதற்றம் | தப்பி ஓடினார் கோத்தபய ராஜபக்ச – நெருக்கடியால் பதவி விலகினார் பிரதமர் ரணில்

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை, அலுவலகத்தை சிறைபிடித்தனர். அப்போது, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தடியடியில் 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்ச, மாளிகையில் இருந்து தப்பியோடிவிட்டார். அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் நெருக்கடியால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகினார். இதனால் இலங்கையில் உச்சகட்ட அரசியல் பதற்றம் ஏற்பட்டி ருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் காஸுக்கு … Read more

டோக்கியோ வந்து சேர்ந்தது ஷின்சோ அபேவின் உடல்| Dinamalar

டோக்கியோ: தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 67, உடல், நேற்று டோக்கியோ வந்தடைந்தது.ஜப்பான் பார்லிமென்டுக்கான மேல்சபை தேர்தல் இன்று நடைபெற இருந்ததை அடுத்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். மேற்கு ஜப்பானில் உள்ள நரா என்ற இடத்தில் பிரசாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் சென்றார். அங்குள்ள ரயில் நிலையம் அருகே, சாலையில் நின்றபடி மக்கள் … Read more

ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார் கோத்தபய ராஜபக்ச – இலங்கை சபாநாயகர் தகவல்

கொழும்பு: அதிபர் பதவியில் ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்ச ஒப்புக்கொண்டார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரும் போராட்டம் அந்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் நேற்று கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். மக்களைத் தடுக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறினர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். போராட்டக்காரர்களால் அதிபர் மாளிகை … Read more

கொந்தளிக்கிறது இலங்கை ! போராட்டக்காரர்கள் ஆவேசம்| Dinamalar

கொழும்பு :இலங்கையில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வராததை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி, அதிபர் மாளிகைக்குள் லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் நேற்று நுழைந்தனர். முன்னெச்சரிக்கையாக வெளியேறிய அதிபர் கோத்தபய, வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டார். அமைச்சர்களும் ஒவ்வொருவராக பதவியை துறக்கின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, உலக அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, நம் அண்டை … Read more

தொலை தொடர்பு சேவை துண்டிப்புகனடாவில் ஒரு கோடி பேர் பாதிப்பு| Dinamalar

டொரோண்டோ:கனடாவில் தொலை தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் மொபைல் போன், இணையதளம், ‘கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு’ சேவை உள்ளிட்ட தொலை தொடர்பை சார்ந்துள்ள அனைத்து சேவைகளும் முற்றிலும் முடங்கின.வட அமெரிக்க நாடான கனடாவில் ‘ரோஜார்ஸ், டெலஸ், பெல்’ ஆகிய நிறுவனங்கள் தொலை தொடர்பு சேவைகளை வழங்கி வருகின்றன. இதில் ரோஜார்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். வங்கிகள் நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் இந்நிறுவன தொலை தொடர்பு சேவையை பயன்படுத்தி வருகின்றன.இந்நிலையில் … Read more

போலீசை தாக்கிவிட்டு மேல்மட்ட சுரங்கப்பாதையிலிருந்து மற்றொரு கட்டிடத்துக்கு தாவிய இளைஞர்.. வைரலாகும் வீடியோ

அமெரிக்காவில், போலீசாரை தாக்கிய இளைஞர் கைது நடவடிக்கையிலிருந்து தப்ப, மேல்மட்ட சுரங்கப்பாதையிலிருந்து மற்றொரு கட்டிடத்தின் மாடிக்கு தாவி ஓடிய நிலையில், அவரை போலீசார் துரத்தி பிடித்து கைது செய்தனர். ப்ரூக்ளின் நகரில் காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்த இளைஞரை போலீசார் விசாரிக்க முயன்ற போது,  அவர்களை தாக்கிவிட்டு இளைஞர் தப்பினார்.     

சிங்கப்பூர் பிரதமர் லீ சீனுக்குகொலை மிரட்டல் விடுத்தவர் கைது| Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூர் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.தென்கிழக்காசிய நாடான ஜப்பானின், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். கருத்துஇந்த செய்தி, சிங்கப்பூரின் ‘சேனல் நியூஸ் ஏஷியா’ என்ற வலைதள பத்திரிகையின் முகநுால் பக்கத்தில் வெளியாகியிருந்தது.இந்த செய்திக்கு, சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர், ‘ஷின்சோ அபேவுக்கு நேர்ந்த கதி, சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லுங்கிற்கும் ஏற்படும்’ என கருத்து தெரிவித்திருந்தார். இது பற்றி தெரியவந்ததும், முகநுாலில் கருத்து … Read more