ஜப்பான் மாஜி பிரதமர் மரணத்துக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம்| Dinamalar

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததே அவரது மரணத்துக்கு காரணம் என, அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா குற்றஞ்சாட்டி உள்ளார். ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, அந்நாட்டின் நரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். மிகவும் பாதுகாப்பான நாடாகவும், துப்பாக்கி பயன்பாட்டுக்கு கடுமையான சட்டங்களை கடைபிடிக்கும் ஜப்பானில் நடந்த இந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை … Read more

'எனது மொத்த சொத்தையும் அறக்கட்டளைக்கு வழங்க திட்டமிட்டுள்ளேன்' – பில் கேட்ஸ்

வாஷிங்டன்: தனது மொத்த சொத்தையும் அறக்கட்டளைக்கு தானமாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ். அதோடு உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். 66 வயதான வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். இதில் 2010 முதல் 2013 வரையில் அவர் முதலிடத்தை இழந்திருந்தார். அதனால் உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு … Read more

ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கும் இந்தியா..!

ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கும் இந்தியாவுக்கு பொருளாதார தடையில் இருந்து விலக்கு அளிக்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க இந்திய காங்கிரஸ் துணைத் தலைவரான ரோ கன்னா கொண்டு வந்த இந்த சட்டத்திருத்தம் குரல் வாக்கெடுப்பு மூலம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா இந்தியாவுடன் துணை நிற்க வேண்டும் என்ற நோக்கத்தில், அமெரிக்காவின் எதிரி நாடுகளை பொருளாதார தடை மூலம் எதிர்கொள்ளும் சட்டத்தில் … Read more

மேற்கு ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புவோருக்கான வாய்ப்பு!| Dinamalar

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர ஏதுவாக state nomination-க்கு விண்ணப்பிக்க முடியுமென அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.2022–23 குடிவரவு திட்டத்தின் கீழ் மேற்கு ஆஸ்திரேலிய state nomination-க்கு ranking system வழியாக தகுதியுள்ள பணியாளர்கள் விண்ணப்பிக்க முடியும். மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் எனவும், அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் … Read more

7 நாட்களில் இலங்கைக்கு புதிய அதிபர்: கோத்தபய ராஜினாமாவை உறுதி செய்த சபாநாயகர் தகவல்

இலங்கைக்கு இன்னும் 7 நாட்களில் புதிய அதிபர் நியமிக்கப்படுவார் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் யப அபேவர்தனா தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இமெயில் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சபாநாயகர் யப அபேவர்தனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், கோத்தபய ராஜபக்ச சட்டபூர்வமாக தனது பதவியை வியாழனன்று ராஜினாமா செய்துள்ளார். அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இன்னும் 7 நாட்களில் முறைப்படி புதிய அதிபர் நியமிக்கப்படுவார் என்றார். … Read more

Sri Lanka Crisis: இலங்கை புதிய அதிபர் யார்..? – 7 நாட்களில் முடிவு!

இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த ஏழு நாட்களில், புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என, நாடாளுமன்ற சபாநாயகர் தகவல் தெரிவித்து உள்ளார். அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள அந்நாட்டு மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு … Read more

ரூ.4 கோடியில் 40 அறுவை சிகிச்சைகள்: அமெரிக்க மாடல் அழகி போல மாற நினைத்த பிரேசில் அழகிக்கு நேர்ந்த விபரீதம்

பிரேசிலியா, சினிமா மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களை போல தங்களின் நடை உடை பாவனைகளை மாற்றி வலம் வரும் சில ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று தங்களை கவர்ந்த பிரபலங்களைப் போல அச்சு அசலாக அப்படியே மாற வேண்டும் என நினைத்து அதிகம் மெனக்கெடுவதும் அவ்வப்போது நடக்கிறது. அப்படி பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஒருவர், உலகப்புகழ் பெற்ற அமெரிக்க மாடல் அழகியாக கிம் … Read more

குழந்தைகள் கண் முன் மனைவியை வெட்டி சமைத்த கொடூர கணவன்

அனைவரின் மனதை பதற செய்யும் ஒரு கொடூரமான சம்பவத்தில், கணவன், தனது ஆறு குழந்தைகள் முன் மனைவியை வெட்டி சமைத்துள்ளார். இந்த சம்பவம் வேறெங்கும் அல்ல பாகிஸ்தானி நடந்துள்ளது. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில், தான் கொடூர செயல் அரங்கேறியுள்ளது. கணவர் தனது மனைவியைக் கொன்று, தனது ஆறு குழந்தைகளுக்கு முன்னால் வெட்டி அண்டா போன்ற பெரிய பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைத்துள்ளார்.  ஊடக அறிக்கை ஒன்றில், புதன் கிழமை நர்கின் என்ற பெண்ணின் சடலத்தை, நகரின் குல்ஷன்-இ-இக்பால் … Read more

இத்தாலி பிரதமரின் ராஜினாமாவை ஏற்க மறுத்த அதிபர்

ரோம், இத்தாலியில் மரியோ டிராகி பிரதமராக பதவி வகித்து வருகிறார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமனம் செய்யப்பட்டார். இத்தாலியில் பொருளாதார நிலை தற்போது மிகவும் மோசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, மரியோ டிராகி திடீரென பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு … Read more

பொருளாதார நெருக்கடியால் போராட்டம் – இலங்கை தலைவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கோரிக்கை

நியூயார்க், இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இலங்கை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். கலவரத்திற்கான காரணம் மற்றும் போராட்டக்காரர்களின் குறைகளை சீர்செய்வது மிகவும் முக்கியம். அமைதியான முறையில் ஜனநாயக மாற்றத்திற்கு சமரசம் செய்யுமாறு அனைத்து கட்சித் தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். … Read more