படகு விபத்து- மியான்மர் கடற்கரையில் ஒதுங்கிய 14 உடல்கள் மீட்பு

யாங்கோன்: மியான்மர் கடற்கரையில் இன்று 14 உடல்கள் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. ரோகிங்கியா அகதிகள் மேற்கு மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்றபோது அவர்களின் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 14 பேரின் உடல்கள் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில், படகு உரிமையாளர்கள் உள்பட 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள புத்திடாங், மவுங்டாவ் மற்றும் சிட்வே ஆகிய நகரங்களில் இருந்து மக்களை ஏற்றிக்கொண்டு படகு சென்றதாக சமூக ஆர்வலர் … Read more

படகில் தீ; 7 பேர் பலி| Dinamalar

மணிலா: பிலிப்பைன்சில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏழு பேர் உயிரிழந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் பொலிலியோ தீவில் இருந்து, ரியல் துறைமுகம் நோக்கி இன்று(மே 23) ஒரு படகு சென்றது. அதில், 134 பயணியர் இருந்தனர். திடீரென படகின் இன்ஜினில் தீப்பற்றி, படகு முழுதும் பரவியது. தீயில் இருந்து தப்பிக்க, பயணியர் கடலில் குதித்தனர். ஆனால், தீயில் சிக்கிய ஏழு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். கடலில் குதித்தவர்களில் 120 பேர் மீட்கப்பட்டனர். … Read more

ஆஸ்திரேலிய பிரதமராக பதவி ஏற்றார் அந்தோனி ஆல்பேன்ஸ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கேன்பெரா : ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக, அந்தோனி ஆல்பேன்ஸ் பதவி ஏற்றார். ஆஸ்திரேலிய பார்லிமென்ட் தேர்தல், சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த, ‘கன்சர்வேட்டிவ்’ கூட்டணி அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து, பிரதமர் ஸ்காட் மோரீசன் பதவி விலகினார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சியை சேர்ந்த அந்தோனி ஆல்பேன்ஸ், புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜப்பானில் நாளை நடக்கவுள்ள ‘குவாட்’ பாதுகாப்பு மாநாட்டில், புதிய … Read more

இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபிய அரசு தடை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெட்டா : மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியா உள்ளிட்ட, 16 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள, சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. கடந்த சில நாட்களாக, சில நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. அதோடு, ‘பிரிட்டன், பெல்ஜியம் உள்ளிட்ட 12 நாடுகளில், 92 பேர் ‘மங்கி பாக்ஸ்’ எனும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பரவும் அபாயம் … Read more

இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள்: பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டோக்கியோ: இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: நான் ஜப்பானுக்கு வரும்போதெல்லாம், உங்களிடம் இருந்து அதீத அன்பை பெறுகிறேன். உங்களில் சிலர் பல ஆண்டுகளாக ஜப்பானில் தங்கியிருந்தாலும், இந்திய கலாச்சாரம் மற்றும் மொழி மீதான அர்ப்பணிப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள். இந்தியாவின் … Read more

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு தனிமை கட்டாயம் – பெல்ஜியம் அரசு அறிவிப்பு!

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம் என, பெல்ஜியம் நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் உலக நாடுகள் பலவற்றில் ‘ மங்கி பாக்ஸ் ‘ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த 21 ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 12 நாடுகளில் 92 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் பாதிப்புக்கு உள்ளான யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை. இந்த தகவலை உலக சுகாதார அமைப்பும் … Read more

உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த தன்னை சீண்டியவரின் விரலை ஆக்ரோஷமாக கடித்து குதறிய சிங்கம்..!

ஜமைக்கா உயிரியல் பூங்காவில் தன்னிடம் சீண்டியவரின் விரலை சிங்கம் கடித்து குதறிய வீடியோ காட்சி இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. செயின்ட் எலிசபத் நகரில் இருந்த அந்த உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த, அங்கு பணியாற்றும் நபர் ஒருவர் கூண்டிற்குள் தனது விரலை நீட்டி சிங்கத்தை சீண்டிக்கொண்டிருந்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த சிங்கம், அந்த நபரின் விரலை கடித்துக் குதறியது.  Show off bring disgrace The lion at Jamaica Zoo ripped his finger … Read more

ரஷ்ய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்த உக்ரைன்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுத்துவரும் நிலையில், ரஷ்ய வீரர் ஒருவரை போர்க்குற்றவாளியாக கைது செய்துள்ள உக்ரைன், அவ்வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரின்போது, 21 வயதான ரஷ்ய ராணுவ வீரர் வாடிம் ஷிஷிமரின், உக்ரைனை சேர்ந்த 62 வயது மூதாட்டியை கொன்றதாக போர் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். மேலும், அவர் வடகிழக்கில் உள்ள சுமி பகுதியில் ஒரு கிராமத்தில் … Read more

ஆபத்துடன் விளையாடும் சீனா… அந்த நாட்டை நாங்கள் பாதுகாப்போம் – அதிபர் ஜோ பைடன்.!

தைவான் நாட்டை, சீன படையெடுப்பில் இருந்து அமெரிக்க ராணுவம் பாதுகாக்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், தைவான் விவகாரத்தில் சீனா ஆபத்துடன் விளையாடுவதாக விமர்சித்தார். தைவானை பாதுகாப்பதாக ஏற்கனவே அந்நாட்டிற்கு அமெரிக்கா உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். Source link

” இலங்கையின் மூத்த சகோதரர் இந்தியா ” – நன்றி தெரிவித்த நமல் ராஜபக்சே

கொழும்பு: இலங்கைக்கு இந்தியா அளிக்கும் உதவி குறித்து அந்நாட்டு முன்னாள் அமைச்சர் நமல் ராஜபக்சே, பல ஆண்டுகளாக இலங்கையின் மூத்த சகோதரராகவும், நல்ல நண்பராகவும் இந்தியா இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு, பல தவணைகளில், 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு அரிசி, மருந்துகள் உள்ளிட்டவை மானியமாக வழங்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழக அரசின், 90 … Read more