12 நாடுகளில் 80 பேருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு

ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மை நோய்த் தொற்று சின்னம்மை போல இருப்பினும்  பாதிப்பு குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய உலக சுகாதார அமைப்பு அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட  12 நாடுகளில் 80 பேருக்கு குரங்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தொற்று வேகமாகப் பரவலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. … Read more

மெஹுல் சோக்சி வழக்கு வாபஸ் : டொமினிகன் அரசு முடிவு| Dinamalar

ரோசாவ் : வங்கி கடன் மோசடியில் தலைமறைவான நகை கடை அதிபர் மெஹுல் சோக்சி மீது சட்ட விரோதமாக டொமினிகன் நாட்டில் நுழைந்தது தொடர்பான வழக்கை திரும்பப் பெறுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.மும்பையைச் சேர்ந்த நகை கடை அதிபர்கள் மெஹுல் சோக்சி, நிரவ் மோடி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து, இந்தியாவில் இருந்து தப்பியோடினர். இதில், நிரவ் மோடி லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு … Read more

பிரான்சில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு

லியோன், தென்கிழக்கு பிரான்சில் உள்ள கிரெனோபில் அருகே உள்ள வெர்சௌட் விமானநிலையத்தில் இருந்து நேற்று பிற்பகலில் சுற்றுலா விமானம் ஒன்று 5 பேருடன் புறப்பது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் விரைவாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் எரிந்த இடிபாடுகளுக்குள் நான்கு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தையின் உடல்களை கண்டுபிடித்தனர். … Read more

Voyager 1: வாயேஜர் அனுப்பும் விசித்திரமான சிக்னல்களால் ஏற்படும் விஞ்ஞான குழப்பங்கள்

நாசாவின் வாயேஜர் 1 சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருந்து வித்தியாசமான சமிக்ஞைகளை அனுப்புவதால் விஞ்ஞானிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. 45 ஆண்டுகள் பழையதாகிவிட்டதால், அது சரியாக செயல்படவில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.   1977 இல் ஏவப்பட்ட வாயேஜர் 1, 12 ஆண்டுகளில் நமது சூரியக் குடும்பத்திலிருந்து வெளியேறி 2012 இல் நட்சத்திர மண்டலத்தில் நுழைந்தது. நாசாவின் வாயேஜர் 1 விண்கலம் ஏவப்பட்டு நாற்பத்தைந்து ஆண்டுகளாக நமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் தனது பயணத்தைத் தொடர்கிறது. பூமியிலிருந்து 14.5 … Read more

விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டாரா? எலான் மஸ்க் மீது பாலியல் குற்றச்சாட்டு

வாஷிங்டன், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவதாக அறிவித்தது முதல் சர்வதேச அளவில் கவனம் பெறும் நபராக மாறியுள்ளார். இந்த நிலையில் எலான் மஸ்க் தன்னுடைய தனி விமானத்தில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதற்காக 2½ லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.94 கோடி) கொடுத்து பிரச்சினையை தீர்த்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல … Read more

இந்திய வெளியுறவுத்துறை யார் பேச்சையும் கேட்பதில்லை என ஐரோப்பிய அதிகாரிகள் கூறுகின்றனர் – ராகுல்காந்தி

லண்டன், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று ‘இந்தியாவுக்கான திட்டங்கள்’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, நான் சில ஐரோப்பிய அதிகாரிகளிடம் பேசினேன். இந்திய வெளியுறவுத்துறை முழுவதும் மாறிவிட்டது. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர். எதையும் கேட்பதில்லை. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தற்போது (இந்திய அரசிடமிருந்து) என்ன உத்தரவு கிடைக்கிறதோ அதை எங்களிடம் அப்படியே தெரிவிக்கின்றனர். எங்களிடம் எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளப்படுவதில்லை என ஐரோப்பிய … Read more

சலுகை விலையில் கச்சா எண்ணெய் – இந்தியாவை மீண்டும் புகழ்ந்த இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: உக்ரைன் போர் தொடங்கியது முதல் ரஷியாவிடம் பல்வேறு நாடுகள் கச்சா எண்ணெயை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றன. இந்தியாவும் மலிவு விலையில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. ஆனால், ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்தியா தொடர்ந்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் முன்னாள் … Read more

நவாஸ் ஷெரீப் மகள் குறித்து சர்ச்சை கருத்து: இம்ரான்கானுக்கு வலுக்கும் கண்டனங்கள்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஆட்சியை இழந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நாடு முழுவதும் தொடர் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த கூட்டங்களில் பேசும் இம்ரான்கான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான புதிய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய இம்ரான்கான், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளான மரியம் நவாஸ் குறித்து தரக்குறைவாக பேசினார். மரியம் நவாஸ் … Read more

நகைக்கடையின் சுவரை துளையிட்டு கொள்ளை: பெண் உள்பட ஜார்கண்டை சேர்ந்த 10 பேர் கைது

மாவட்ட செய்திகள் பெங்களூரு: நகைக்கடையில் கொள்ளை பெங்களூரு ஜே.பி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி உரிமையாளர், நகைக்கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கடையின் பின்பக்க சுவர் துளையிடப்பட்டு இருந்தது. மேலும் கண்ணாடி பெட்டிகளுக்குள் இருந்த தங்கநகைகள் திருடப்பட்டு இருந்தது. மர்மநபர்கள் சுவரை துளையிட்டு நகைக்கடைக்குள் புகுந்து 5 கிலோ தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நகைக்கடையின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் ஜே.பி.நகர் போலீசார் … Read more

அந்தோனி ஆல்பேன்ஸ் ஆஸ்திரேலிய புதிய பிரதமர்| Dinamalar

கேன்பெரா: ஆஸ்திரேலியா புதிய பிரதமராக அந்தோனி ஆல்பேன்ஸ் தேர்வு செய்யப்பட உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆஸ்திரேலிய பார்லி.,யில் மொத்தம் உள்ள 151 இடங்களுக்கான தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை நடந்தது. ஆட்சி அமைக்க 76 இடங்கள் தேவை என்ற நிலையில், நேற்று மாலையிலேயே எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 72 இடங்களை கைப்பற்றியது. ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தலைவரும், பிரதமருமான ஸ்காட் மோரீசன் தோல்வியை ஒப்புக் கொண்டார். தொழிலாளர் … Read more