தவறான திசையில் செல்லும் தாலிபான் அரசு.. சர்வதேச சமூகம் உணர்த்த வேண்டும்.. ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு.!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு தவறான திசையில் செல்வதாகவும் இதனை சர்வதேச சமூகம் சொல்ல வேண்டும் என்றும் ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சென்றுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தாலிபான்களால் தங்கள் அரசாங்கம் தூக்கி எறியப்பட்டது ஆப்கானிஸ்தான் மக்களின் தவறு அல்ல என்றும், ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான பேரழிவு உருவாகி இருப்பதாகவும் எச்சரித்தார்.  Source link

எல்லாத்துக்கும் இனி ஒரே சார்ஜர் தான்… தீர்மானம் நிறைவேற்றிய ஐரோப்பிய ஒன்றியம்..!

2024 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான செல்போன் சார்ஜர்களை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆப்பிள் போன்கள் மற்றும் ஆண்டிராய்டு போன்களுக்கு வெவ்வேறு சார்ஜர்கள் பயன்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்கள் விதவிதமான சார்ஜர்களை வாங்க வேண்டி உள்ளது. இதனால் ஏற்படும் பண விரயத்தை போக்குவதற்காக ஐரோப்பா முழுவதும் அனைத்து செல்போன்கள், டேப்ளட்கள், கேமராக்கள் ஆகியவற்றில் ஆண்டிராய்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சி-டைப் சார்ஜர்களை பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனம் … Read more

வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்தால் போதும்… புதிய கலாச்சாரத்திற்கு கைக்கொடுக்கும் உலக நாடுகள்

70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 3,300 பணியாளர்கள் பங்கேற்புடன், வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை என்ற உலகின் மிகப்பெரிய சோதனை இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் பல்வேறு துறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) தொடங்கிய உலகளாவிய ஆய்வில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இந்த சோதனையோட்டத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்து 3 நாட்கள் விடுமுறை பெறுகிறார்கள். இதில் என்ன கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் இவர்களுக்கு … Read more

இங்கிலாந்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் அமல்..!

இங்கிலாந்தின் பல்வேறு நிறுவனங்களில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் இத்திட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 70 நிறுவனங்களும் சுமார் 3 ஆயிரத்து 300 ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர். வாரத்தில் 4 நாட்கள் பணிபுரிந்தாலும் முழு ஊதியத்தையும் வழங்க அனைத்து நிறுவனங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. ஊதிய இழப்பு இல்லாத இந்த திட்டம் தொழிலாளர்கள் நலனையும் உற்பத்தி திறனையும் அதிகரிப்பதில் எந்த அளவிற்கு பயன்படுகிறது என்பது குறித்து … Read more

“கொஞ்சம் காரமா கொடுங்க” – தமிழில் உணவு ஆர்டர் செய்த அமெரிக்க யூடியூபர் | வைரல் வீடியோ

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் அங்குள்ள உணவகத்தில் தமிழில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதற்காக அந்த உணவக உரிமையாளர் அவருக்கு உணவை இலவசமாக வழங்கியுள்ளார். அந்த வீடியோ இப்போது பரவலாக கவனம் ஈர்த்து வருகிறது. என்ன நடந்தது என்பதை சற்றே விரிவாக பார்ப்போம். இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்ப சாதனங்களின் துணை கொண்டு சாமானியர்களும் பல்வேறு வீடியோக்களை உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதில் பிரதானமானது யூடியூப். இதில் ரெகுலராக … Read more

52 வயது பெண்ணை தண்டவாளத்தில் தள்ளி விட்ட இளைஞர்.. தள்ளிவிட்டவரை பற்றி தகவல் அளிப்பவருக்கு 3,500 டாலர் வெகுமதி அறிவிப்பு..!

அமெரிக்காவில், ரயில்வே தண்டவாளத்தில் 52 வயது பெண்ணை இளைஞர் ஒருவர் தள்ளி விட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். நியூயார்க்கின் வெஸ்ட் செஸ்டர் & ஜேக்சன் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் குறித்து, நியூயார்க் போலீசார் வீடியோ வெளியிட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை கண்டறிய மக்கள் உதவ வேண்டுமெனவும் போலீசார் … Read more

கம்போடியாவில் ரகசிய கடற்படை தளத்தை அமைக்க சீனா திட்டமிடுகிறதா

பசிபிக் பகுதியில் ஆதிக்கம் செய்ய முடியாத நிலையில், கம்போடியாவில் ரகசிய கடற்படை தளத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் சீனாவின் ராணுவ பலத்தை விரிவுபடுத்தும் ராணுவ தளத்தின் கட்டுமானப் பணிகளை கம்போடியாவில் சீனா துவக்கவிருக்கிறது.  கம்போடியாவில் அமையவிருக்கும் இந்த ராணுவத்தளம் மலாக்கா ஜலசந்தி (Malacca Straits)க்கு அருகில் சீனாவின் ராணுவ செல்வாக்கையும் அதிகரிக்கும். மலாக்கா ஜலசந்தி (Malacca Straits) இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தனது … Read more

21 வயதுக்குட்பட்டோர் துப்பாக்கி வாங்க தடை – அரசு அதிரடி உத்தரவு!

நியூயார்க் மாகாணத்தில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பு 18ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில், துப்பாக்கிக் கலாசாரம் தலைதூக்கி உள்ளது. அங்கு அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. அண்மையில், நியூயார்க்கில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேரும், டெக்சாஸ் மாகாணத்தில் தொடக்கப் பள்ளியில் வாலிபர் துப்பாக்கியால் சுட்டதில் 19 மாணவர்கள் உள்பட 21 பேரும் பலியான சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. … Read more

6.5 கி.மீ தூரத்திற்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகள்.. அகற்றும் பணியில் ஈடுபட்ட ரஷ்ய வீரர்கள்..!

டொனட்ஸ்க் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கன்னி வெடிகளை ரஷ்ய வீரர்கள் அகற்றும் காட்சிகளை ரஷ்ய அவசரகால அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தன்னாட்சி பெற்ற டொனட்ஸ்க் பகுதியில், சுமார் 6.5 கிலோமீட்டர் தூரத்திற்கு புதைத்து வைக்கப்பட்ட கன்னி வெடிகளை அகற்றும் பணியில், ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டனர். இதில், ரிமோட் மூலம் இயங்கக்கூடிய கன்னி வெடி அகற்றும் வாகனம் மூலம் 10 டாங்கி எதிர்ப்பு கன்னி வெடிகள் மற்றும் சாதாரண கன்னி வெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. Source link

உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா உதவ வேண்டும்.. இலங்கை வேளாண்துறை அமைச்சர் கோரிக்கை..!

உணவு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பில் உதவ வேண்டும் என்று இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களை அளித்து உதவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே அண்மையில் இலங்கையின் வேளாண்துறை அமைச்சர் மகிந்தா அமரவீராவை சந்தித்து பேசினார். அப்போது இலங்கையின் உணவு  மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா உதவ வேண்டும் என்று அமைச்சர் மகிந்தா அமரவீரா கோரிக்கை விடுத்தார். Source … Read more