உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை!

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் இந்த போரின் விளைவாக இருதரப்பிலும் பல்லாயிரகணக்கில் உயிர் சேதம், பொருள்சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ரஷியா- உக்ரைன் போர் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதனிடையே இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக சண்டையிட்ட 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த இருவர் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவர் என் மூன்று பேருக்கு, … Read more

பால்டிக் கடலில் மிகப்பெரிய பரப்பில் மர்ம திரவக்கசிவு.. விமானங்கள் மூலம் திரவத்தின் பரவல் மேப்பிங் செய்யப்பட்டு ஆய்வு.!

சுவீடனை ஒட்டியுள்ள பால்டிக் கடலில் மிகப்பெரிய பரப்பில் மர்ம திரவக்கசிவு ஏற்பட்டுள்ளது. அது உயிரி எரிபொருள் வகையாக இருக்கலாம் என கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். 77 சதுர கிலோமீட்டர் பரப்பில் ஸ்வீடனை ஒட்டியும், ஃபின்லாந்தை ஒட்டியும் அந்த திரவ கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மர்ம திரவம் முதன்முதலில் கடந்த புதன்கிழமை போத்னியன் கடலில் கண்டறியப்பட்டது. அது கச்சா எண்ணெய் அல்ல என்றும், அது கரை ஒதுங்குவதற்கான அறிகுறி தற்போதைக்கு இல்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் அது என்ன … Read more

பர்வேஸ் முஷாரப் உடல் நிலை கவலைக்கிடம்: குடும்பத்தினர் தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குடும்பத்தினர் தரப்பில் கூறும்போது, “பர்வேஸ் முஷாரப் வென்டிலேட்டரில் இல்லை. கடந்த 3 வாரங்களாக அவரது நோயின் (அமிலாய்டோசிஸ்) தீவிரத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீள்வது சாத்தியமில்லாமல் இருக்கிறது. உடல் உறுப்புகள் செயலிக்கும் தருணத்தில் உள்ளன. பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளனர். Source link

என்னவா இருக்கும்.? விண்வெளியில் இருந்து வந்த மர்ம ரேடியோ சிக்னல்… ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள்..!

விண்வெளியில் வேறொரு பிரபஞ்சத்தில் இருந்து வந்த மர்ம ரேடியோ சிக்னல்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வப்போது விண்வெளியில் இருந்து கிடைக்கும் மர்ம ரேடியோ சிக்னல்கள் இந்த ஆராய்ச்சிக்கு கூடுதல் வலு சேர்த்து வருகின்றன. அந்த வகையில் அண்மையில் வேறொரு பிரபஞ்சத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சிக்னல் பூமியிலிருந்து 3 பில்லியன் ஒலி ஆண்டுகள் தொலைவில் இருந்து வந்திருக்கலாம் என்று … Read more

குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டம்!

ஸ்பெயினில், குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஸ்பெயினில் 240க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு பவேரியன் நோர்டிக் நிறுவனத்தின் இம்வானெக்ஸ் தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், நோய் தொற்று பரவல் அபாயம் உள்ளவர்களுக்கு மட்டுமே தற்போதைக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்திருப்பதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.  Source link

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும், அவை மீட்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.  முஷாரப் நீண்டகாலமாக நோயால் அவதிப்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். “குடும்பத்தினரின் செய்தி: அவர் வென்டிலேட்டரில் இல்லை. கடந்த 3 வாரங்களாக அவரது உடல்நலக்குறைவு (அமிலாய்டோசிஸ்) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்பு சாத்தியமில்லாத மற்றும் உறுப்புகள் செயலிழந்த கடினமான கட்டத்தில் அவர் இருக்கிறார். அவர் நன்றாக … Read more

மக்களை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தும் சீன அரசு.. 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தல்..!

உலகில் மக்கள் தொகை அதிகமுள்ள நாடான சீனாவில், தற்போது மக்கள் குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தும் வியப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கருத்தடையை கட்டாயமாக அமல்படுத்திய அந்த நாடு தற்போது இளம் வயதிலேயே திருமணம் செய்துக்கொண்டு 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு மக்களை வற்புறுத்துகிறது. ஆனால் ஏற்கனவே கொரோனா தொற்று, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், பொருளாதார சீர்கேடு ஆகியவற்றால் மனம் வெறுத்து போயுள்ள சீன மக்கள் அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திருமண எண்ணிக்கையில் கடும் சரிவு, தொழிலாளர்கள் … Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப் கவலைக்கிடம்!

பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ராணுவத் தளபதியுமான பர்வேஸ் முஷரஃப் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருக்கு வயது 78. பாகிஸ்தானின் Waqt news வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஜூன் 10ஆம் தேதி அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வெளியேறி துபாயில் வசித்து வந்த பர்வேஸ் முஷரஃப்பின் உடல்நிலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோசமடைந்தது. இதையடுத்து, துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் … Read more

மனிதனை போலவே தத்ரூப வடிவம் கொண்ட ரோபோவின் விரலில் மனித தோலை பொருத்தி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை..!

மனிதர்களை போலவே ரோபோக்களை தத்ரூபமாக வடிவமைப்பதில் வல்லவர்களான ஜப்பான் விஞ்ஞானிகள் தற்போது ஒரு படி மேலே போய் ரோபோ மனிதனின் விரலில் உயிருள்ள நிஜ மனித தோலை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். மனிதர்களை போலவே தோற்றம், புரிந்துக்கொள்ளும் திறன், அசைவுகள், உணர்திறன் போன்றவற்றை ரோபோக்களிடம் அதிகரிக்கும் ஆராய்ச்சியின் தொடர்ச்சியாகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்காலத்தில் மனித நரம்புகள், இரத்தக் குழாய்கள் போன்றவற்றையும் ரோபோக்களில் பொருத்தி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். … Read more

பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் 3 -வது திருமணம் தடுக்க முயன்ற 2-வது கணவா் கைது

லாஸ் ஏஞ்சல்ஸ், அமொிக்காவை சோ்ந்த பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து உள்ளது. இந்த நிலையில் தனது நண்பரான சாம் அஸ்காாியை 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டாா். இவா்களது திருமணம் கலிபோா்னியாவில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பிரிட்னி ஸ்பியர்சின் 2-வது கணவா் ஜேசன் அத்துமீறி நுழைந்தாா். அவரது இன்ஸ்டாகிராமில் வைவ் செய்தாா். அங்கிருந்த பாதுகாவலா்கள் அவரை தடுத்து நிறுத்தினா். இந்த திருமணத்திற்கு அவா் அழைக்கப்படாததால் … Read more