அதிகரிக்கும் கொரோனா: ராணுவத்திற்கு அதிபர் அதிரடி உத்தரவு!

வட கொரியாவில் ராணுவத்தில் உள்ள மருந்துவ குழுக்கள், தலைநகர் பியாங்யாங்கில் மருந்துகள் வினியோகத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு உள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவிய போதும், வட கொரியாவில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா நுழையாமல் இருந்தது. அங்கு எல்லைகள் மூடப்பட்டு, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இருந்தாலும், அங்கு கொரொனா இல்லை என்பதை உலக நாடுகளால் நம்ப முடியவில்லை. இந்நிலையில், கடந்த 12 ஆம் … Read more

மரியுபோல் உருக்காலையிலிருந்து மனிதாபிமான வழித்தடம் வழியாக உக்ரைன் வீரர்கள் வெளியேற ரஷ்யா அனுமதி.!

மரியுபோல் உருக்காலையில் சிக்கியிருந்த உக்ரைன் வீரர்கள் வெளியேற ரஷ்யா அனுமதித்ததை தொடர்ந்து அவர்கள் பேருந்துகள் மூலம் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். கடந்த சில நாட்களாக அந்த உருக்காலையைத் தரைமட்டமாக்கும் நோக்கில் ரஷ்ய படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தின. அங்கு பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்களை வெளியேற அனுமதிக்குமாறு உலக நாடுகளின் தலைவர்கள் வைத்த கோரிக்கையை ரஷ்யா ஏற்றுக்கொண்டது. முதல்கட்டமாக 5 பேருந்துகள் மூலம் உக்ரைன் வீரர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நோவோ-அசோவ்ஸ்க் நகருக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் … Read more

'கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்' – ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நம்பிக்கை

வாஷிங்டன்: கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்புவதாக தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட். கடந்த வாரம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு. அதற்காக ஏற்றுமதி கொள்கையிலும் திருத்தம் மேற்கொண்டிருந்தது. இந்த தடை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மத்திய வர்த்தக துறை தெரிவித்திருந்தது. இந்திய துணைக்கண்டத்தில் நிலவி வரும் அதீத வெப்பத்தினால் வரும் நாட்களில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற பார்வையில் இந்த … Read more

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பாலஸ்தீன பெண் பத்திரிக்கையாளரின் சுவரோவியங்களை வரைந்து ஓவியர்கள் அஞ்சலி!

இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பாலஸ்தீன பெண் பத்திரிக்கையாளரின் சுவரோவியங்களை வரைந்து காசா நகர ஓவியர்கள் அஞ்சலி செலுத்தினர். இம்மாத 11-ந் தேதி அகதிகள் முகாம் ஒன்றில் இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தலையில் குண்டு பாய்ந்து ஷிரீன் அபு உயிரிழந்தார். 20 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனம் தொடர்பான செய்திகளை உலகிற்கு வழங்கி வந்த ஷிரீன் அபு-விற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த சுவரோவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. Source link

ஃபின்லாந்து, ஸ்வீடன் நாடுகளை எப்படி நம்புவது? துருக்கி கேள்வி

அங்காரா: உக்ரைன் மீதான ரஷியயா படையெடுப்பை தொடர்ந்து, ரஷியாவின் அண்டை நார்டிக் நாடுகளான ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இருநாடுகளும் விரைவில் இணைவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.  ரஷிய படையெடுப்பில் இருந்து பாதுகாப்பு வேண்டி தாங்கள் நேட்டோவில் இணையவுள்ளதாக இரு நாடுகளும் அறிவித்தன.   ஆனால் நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய வேண்டுமென்றால் அதன் தற்போதைய உறுப்பினர்களான 30 நாடுகளின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இந்தநிலையில், நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய விரும்பும் ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடனின் … Read more

வட கொரியா: கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒரே நாளில் 2.7 லட்சம் பேருக்கு காய்ச்சல்

வடகொரியாவில் கொரோனா வைரஸ்: வடகொரியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் 2,69,510 பேரில் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாகவும், 6 பேர் மேலும் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.  இந்த தகவலை அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இருப்பினும், கோவிட்-19 காரணமாக எத்தனை பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை வடகொரியா இன்னும் தெளிவுபடுத்தவில்லை. மக்கள் காய்ச்சலின் பிடியில் வேகமாக சிக்கி வருகிறார்கள்  வட கொரியாவின் வைரஸ் எதிர்ப்பு தலைமையகத்தின் கூற்றுப்படி, … Read more

துக்க நிகழ்ச்சியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் போலீசாருக்கும் இடையே மோதல்.!

அல் அக்ஸா மசூதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலால் உயிரிழந்த நபரின் இறுதி ஊர்வலத்தில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. கடந்த மாதம் 22-ந் தேதி நடைபெற்ற இந்த மோதலில், வலீத்-அல் ஷரீப் என்ற அந்த நபர் உள்பட 30 பேர் காயமடைந்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் போலீசார் மீது கற்கள் மற்றும் பட்டாசுகளை வீசினர். பதிலுக்கு போலீசார் கண்ணீர் புகை … Read more

அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் பொருளாதார மந்தநிலை; காரணம் என்ன

கொரோனா வைரஸ் தொற்றுநோய், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை சந்தித்து மீண்டு வர அமெரிக்கா முயற்சித்து வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா பொருளாதார மந்தநிலை மீண்டும் ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.  அமெரிக்காவிலுள்ள 80% க்கும் அதிகமான வயது வந்தோர் இந்த ஆண்டு அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்று நம்புகிறார்கள். மார்ச் கடைசி வாரத்தில் மொமென்டிவ் நிறுவனம் நடத்திய இந்த கணக்கெடுப்பில், 4000திற்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்தை பதிவு செய்திருந்தனர். … Read more

வட கொரியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.. மருந்து விநியோகிக்கும் பணியில் ராணுவ வீரர்கள்.!

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருந்துகள் விநியோகிக்கும் பணிக்காக அந்நாட்டு அரசு ராணுவ வீரர்களை களமிறக்கியுள்ளது. கடந்த 12ம் தேதி முதன்முறையாக கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக வடகொரிய அரசு ஒப்புக் கொண்டது. அதன் பிறகு தற்போது வரையில் நோய் பாதிப்புக்கு 56 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புகள் 10 லட்சத்தை எட்டியிருக்கும் நிலையில், அந்நாட்டில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், வடகொரியாவில் மருந்தகங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் … Read more

இலங்கை மக்களுக்கு அடுத்த இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும்: ரணில் விக்ரமசிங்கே பகிரங்க பதிவு

கொழும்பு: “இலங்கை மக்களுக்கு அடுத்து இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது” என்று அந்நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், இலங்கையின் உண்மை நிலவரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டு மக்களுக்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து ரணில் விக்ராசிங்கே தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, “அடுத்து வரும் இரு மாதங்கள் இலங்கை மக்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். இதுகுறித்து பொது … Read more