ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்டில் 5-வது முறையாக விண்வெளி பயணம்.. ஈர்ப்பு விசையை இழந்து விண்ணில் மிதந்து மகிழ்ச்சி..!

அமேசான் நிறுவனர் ஜெப் பெசாசின் ப்ளூ ஆர்ஜின் நிறுவன விண்கலத்தில் 6 பேர் கொண்ட குழு விண்வெளி சுற்றுலா சென்று திரும்பியது. மேற்கு டெக்சாசில் உள்ள வான் ஹார்ன் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 106 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 10 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்தனர். கார்மன் கோடு அருகே ஈர்ப்பு விசையை இழந்து சிறிது நேரம் விண்ணில் மிதந்தனர். பின்னர் அவர்கள் சென்ற கேப்சியுல் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. Source link

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின்பாதுகாப்பில் பெரும் குளறுபடி… நடந்தது என்ன

அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் வீட்டிற்கு அருகே நோ பிளை சோன் (No Fly Zone) என்னும் விமனம் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதிக்குள் விமானம் நுழைந்ததை அடுத்து அங்கே பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, அதிபரும் அவரது மனைவியும் வீட்டில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெலாவேரில் உள்ள பிடனின் வீட்டிற்கு அருகே ஒரு … Read more

குடியிருப்புகளை கபளீகரம் செய்த காட்டுத் தீ.. வீடுகளை விட்டு வெளியேறி முகாம்வாசிகளாக மாறிய மக்கள்..!

கிரீஸ் வூலா பகுதியில் குடியிருப்புகளை கபளீகரம் செய்யும் காட்டுத் தீயில் திரளான மக்கள் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறும் அவலத்திற்கு தள்ளப்பட்டனர். தீ விபத்திற்கான காரணம் தெரிய வராத நிலையில் மலைப் பகுதிகளை சுற்றி உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். 130க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 6 விமானம் மற்றும் 4 ஹெலிகாப்டர்களை கொண்டு தீயணைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். Source link

சீனாவின் புதிய குழு பயணம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்-விண்வெளியில் அமைத்து வரும் விண்வெளி மைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, மூன்று வீரர்களை சீனா அனுப்புகிறது. இவர்கள் இன்று பயணம் மேற்கொள்ள உள்ளனர். விண்வெளி ஆய்வுக்காக விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் முயற்சியில் பல நாடுகள் இணைந்து இந்த மையத்தை அமைத்து உள்ளன.இதற்கு போட்டியாக, விண்வெளியில் தனியாக விண்வெளி மையத்தை சீனா அமைத்து வருகிறது. 2021 ஏப்ரலில் இதற்கான பணிகள் துவங்கின. மொத்தம், 11 முறை விண்வெளி … Read more

உள்நாட்டு கொள்கலன் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து. 5 பேர் உடல்கருகி பலி..!

வங்காளதேசத்தில் கண்டெய்னர் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் மோசமான தீக்காயங்களுடன் மீட்கபட்டனர். Sitakunda பகுதியில் உள்ள உள்நாட்டு கொள்கலன் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்தின் போது 600 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், 5 பேர் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். உயிரிழப்பு அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. தீவிபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் … Read more

மேற்கத்திய நாடுகள் மீது ரஷ்ய அதிபர் குற்றச்சாட்டு| Dinamalar

மாஸ்கோ ”சர்வதேச சந்தையில் உணவு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக்கு மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடைகள் தான் காரணம்,” என, அந்நாட்டு அதிபர் புடின் குற்றஞ்சாட்டியுள்ளார். உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதியை ரஷ்யா தடுப்பதாக உக்ரைன் அரசு புகார் கூறியுள்ளது. இது குறித்து ரஷ்ய ‘டிவி’யில் அதிபர் விளாடிமிர் புடின் கூறியதாவது:உலகளவில் உணவு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக்கு மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளும் ஒரு … Read more

உக்ரைன் கார்கீவில் தனியார் விமான நிலையத்தில் ரஷ்யப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 10 விமானங்கள் சேதம்.!

உக்ரைன் கார்கீவில் தனியார் விமான நிலையத்தில் ரஷ்யப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 10 விமானங்கள் சேதமடைந்தன. ஏவுகணை தாக்கியதில் நிலையத்தின் கொட்டகை, மற்றும் அதில் இருந்த பெரிய விமானம் எரிந்து தீக்கிரையானது. சுற்றுலா, விளையாட்டு, உள்ளிட்ட தனிப்பட்ட பயணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த விமானங்கள் தீக்கிரையாகின. தாக்குதலில் உயிர் சேதம் ஏற்படவில்லை என கூறப்படும் நிலையில், சுக்குநூறாக கிடக்கும் விமான பாகங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. Source link

எதையும் உலகப் பிரச்சினையாக பார்க்கும் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை மாற வேண்டும் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

புதுடெல்லி: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவாகியாவின் தலைநகர் பிராடிஸ்வாலாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இந்தியாவின் ஆதரவைப் பெற இரு நாடுகளுமே முயற்சித்து வருகின்றன. ஆனால், இந்தியா எந்தவொரு நாட்டுக்கும் ஆதரவு அளிக்காமல், வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியா – சீனா இடையேயான பிரச்சினை … Read more

வீட்டிலிருந்து வேலை கிடையாது| Dinamalar

சிட்னி:’அனைத்து ஊழியர்களும் குறைந்தபட்சம், வாரத்தில், 40 மணி நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டும்; அவ்வாறு வராதவர்கள் ராஜினாமா செய்ததாக கருதப்படுவர்’ என, உலகின் மிகப் பெரும் பணக்கார தொழிலதிபரான எலன் மஸ்க் கூறியுள்ளார்.அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளவர் எலன் மஸ்க். இவர் சமீபத்தில் தன் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், ‘டெஸ்லா ஊழியர்கள், வாரத்தில் குறைந்தபட்சம், 40 மணி நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். அவ்வாறு வராதவர்கள், … Read more

புல்லட் ரயில் விபத்துடிரைவர் பரிதாப பலி| Dinamalar

பீஜிங்:சீனாவில், ‘புல்லட்’ எனப்படும், அதிவேக ரயில் தடம் புரண்டதில் டிரைவர் உயிரிழந்தார். ஏழு பயணியர் காயம் அடைந்தனர்.நம் அண்டை நாடான சீனாவின் தென்மேற்கில் உள்ள குய்சோ மாகாணத்தில் இருந்து, குவாங்சோ மாகாணத்துக்கு அதிவேக புல்லட் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. ரோங்ஜியாங் ரயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயில் டிரைவர் உயிரிழந்தார். காயம் அடைந்த ஏழு பயணியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரயிலில் இருந்த 136 பயணியர் … Read more