டெஸ்லா நிறுவனத்தில் ஆட்குறைப்பு முயற்சியில் எலான் மஸ்க் – அச்சத்தில் பணியாளர்கள்!

டெக்சாஸ்(அமெரிக்கா), உலகின் டாப்-10 முன்னணி பணக்காரரும் டெஸ்லா வாகன தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பகுதியளவு பணியிடங்களை நீக்குமாறு கட்டளையிட்டுள்ளார். இதுகுறித்து டெஸ்லா நிறுவன நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில், இப்போதிருக்கும் பணியிடங்களில் 10 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என்று மஸ்க் கூறியுள்ளார். அதேபோல, ‘உலகெங்கிலும் புதிதாக யாரையும் பணியமர்த்த வேண்டாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், டெஸ்லா நிறுவனத்தில் அலுவலகங்களுக்கு வராமல், வீட்டிலிருந்தபடியே பணி செய்துவரும் முறையை அவர் தடை செய்தார். இதை … Read more

தேசிய துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினம் கடைபிடிப்பு.. ஆரஞ்சு நிறத்தில் மிளிர்ந்த வெள்ளை மாளிகை..!

அமெரிக்காவில் தேசிய துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையின் வடக்கு முகப்பு ஆரஞ்சு நிறத்தில் மிளிர்ந்தது. அண்மைக் காலமாக பெருகி வரும் துப்பாக்கிச் சூடு வன்முறகளை கட்டுப்படுத்த துப்பாக்கி வாங்கும் குறைந்தபட்ச வயது வரம்பை 21 ஆக உயர்த்துவது, ஆயுதம் வாங்குவோரின் பின்னணியை விசாரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிபர் பைடன் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தேசிய துப்பாக்கி வன்முறை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகை மற்றும் அரசு கட்டடங்கள் ஆரஞ்சு நிறத்தில் … Read more

பிரான்ஸ் நாட்டில் 51 பேருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி

பாரீஸ் உலகளவில் குரங்கு அம்மை நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரான்சில் 51 பேருக்கு குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளன என்று பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 22 முதல் 63 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் பிரெஞ்சு தேசிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் அறிகுறிகளாக அடிக்கடி காய்ச்சல், தசைவலி, குளிர், சோர்வு மற்றும் கைகள் மற்றும் முகத்தில் ஒரு சின்னம்மை போன்ற சொறி மூலம் … Read more

எந்த நாடும் ஆப்கானிஸ்தானில் பாதிப்பு ஏற்படுத்துவதை விரும்பவில்லை – பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து வழங்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை மேற்பார்வையிட, வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (பிஏஐ) ஜே.பி. சிங் தலைமையிலான குழு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு பயணம் மேற்கொண்டது. இதுகுறித்து கருத்து தொிவித்த பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடா்பாளா் அசிம் இப்திகார் கூறுகையில், மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமை மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை எடுத்துச் செல்ல பாகிஸ்தான் கடந்த நவம்பா் மாதம் அனுமதி அளித்தது. “அமைதியான, நிலையான … Read more

பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்.. ஷபாஸ் ஷெரிப் அரசை கண்டித்து பெண்கள் கோஷம்..!

பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கண்டித்து பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்திற்காக ஒரே வாரத்தில் 2-வது முறையாக எரிபொருள் விலையை ஷாபஸ் ஷெரிப் அரசு உயர்த்தியது. அரசை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்தார். லாஹூர், கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் திரண்ட நுற்றுக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் … Read more

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது தேசத்துரோக வழக்கு: பாகிஸ்தான் அரசு முடிவு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கிடையில், தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறியும், ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றதையும் இம்ரான்கான் ஏற்க மறுத்துவருகிறார். மேலும், தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சஃப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்தில் … Read more

நைஜீரியாவில் பைக் டாக்ஸிக்கு தடை.. 2,200 இரு சக்கர வாகனங்கள் ராட்சத இயந்திரம் கொண்டு நசுக்கப்பட்டன..!

நைஜீரியாவில் பைக் டாக்ஸி தடை செய்யப்பட்டதை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் ராட்சத இயந்திரம் மூலம் நசுக்கப்பட்டன. பைக் டாக்ஸில் ஓட்டுநர்களால் ஏற்படும் கலவரம் மற்றும் அண்மையில் அதிக பணம் தரமறுத்த வாடிக்கையாளரை பைக் டாக்ஸி தொழிலாளர்கள் அடித்துக் கொன்ற சம்பவத்தை அடுத்து நைஜீரியாவில் பைக் டாக்ஸி தடை செய்யப்பட்டது. ஓட்டுநர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 228 இரு சக்கர வாகனங்களை ராட்சத இயந்திரம் கொண்டு … Read more

ஒரே வாரத்தில் 2-வது முறையாக பெட்ரோல் விலையை உயர்த்திய பாகிஸ்தான்

இஸ்லமாபாத்: பாகிஸ்தான், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதாக கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) அறிவித்தது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில், இம்ரான்கான், பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார். அதனால், அவற்றுக்கான மானியமாக அரசுக்கு மாதத்துக்கு 60 கோடி டாலர் செலவானது. இதனால், ஆத்திரம் அடைந்த சர்வதேச நிதியம், கடன் திட்டத்தில் மீதி தொகையான 300 கோடி டாலரை நிறுத்தி வைத்து விட்டது. அந்த கடனை … Read more

8K அல்ட்ரா ஹெச்.டி. தரத்தில் பூமியை படமெடுத்த வீடியோ சீனா வெளியீடு..!

விண்வெளி நிலைய பணியின் போது பூமியை சுற்றி எடுக்கப்பட்ட 8K அல்ட்ரா ஹெச்.டி. தரத்திலான விடியோவை சீனா வெளியிட்டு உள்ளது. தனக்கென தனி விண்வெளி நிலையத்தை கட்டமைத்து வரும் சீனா அதற்காக கடந்த ஆண்டு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது. ஆறு மாத காலம் கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்ட வீரர்கள் கடந்த ஏப்ரல் மாதம் பூமிக்கு திரும்பினர். கட்டமைப்பு பணிகளின் போது வீரர்கள் எடுத்த வீடியோவை 8 கே அல்ட்ரா எச்.டி. தரத்தில் சீனா வெளியிட்டுள்ளது. அடுத்தகட்ட பணிகளை … Read more

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் மேற்கத்திய நாடுகள்தான்- புதின் குற்றச்சாட்டு

மாஸ்கோ: ரஷியா, உக்ரைன் போர் 100வது நாளை தாண்டிய நிலையில், இரு நாடுகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளன. இதற்கு ரஷியாதான் காரணம் என மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.  இந்நிலையில் வளர்ந்து வரு உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு மேற்கத்திய நாடுகள்தான் காரணம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டினார். இதுகுறித்து … Read more