விஜய் மல்லையா, நீரவ் மோடி விவகாரம்; தஞ்சமடைவதற்கான நாடாக பிரிட்டன் இருக்காது – பிரிட்டன் அமைச்சர் தகவல்

புதுடெல்லி: கிங் பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்தாமல் 2016-ம் ஆண்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அதேபோல், வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் 2018-ம் ஆண்டு பிரிட்டன் தப்பிச் சென்றார். விஜய் மல்லையா, நீரவ் மோடி இருவரையும் இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில், “தண்டனையிலி ருந்து … Read more

H1-B விசா: அமெரிக்கா மீது வழக்குத் தொடுத்த இந்தியர்கள்! IT பணியாளர்களுக்கு விசா மறுப்பு?

H1 B visa vs America: ஹெச்1-பி விசா நிராகரிப்பு தொடர்பாக 70 இந்தியர்கள் அமெரிக்காவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Death toll rises in Hawaii wildfires | ஹவாய் காட்டுத்தீயில் பலி எண்ணிக்கை உயர்வு

லஹைனா- அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 89ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில், எட்டு தீவு நகரங்கள் உள்ளன. இங்கு, இரண்டாவது பெரிய நகரமாக மவுய் உள்ளது. இங்கு, கடந்த 8ம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீ, அருகில் உள்ள சிறு நகரங்களுக்கும் பரவியது. குடியிருப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் தீ பரவியதை அடுத்து, மவுய் நகரில் இருந்த ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். அழகிய பூங்காக்கள், 2,000க்கும் அதிகமான … Read more

பாகிஸ்தான்: சீனர்களை குறிவைத்து பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் தற்கொலைப்படை தாக்குதல்

பலுசிஸ்தான், பாகிஸ்தானில் உள்ளூர் பிரிவினைவாதக் குழுவான பலுசிஸ்தான் விடுதலை இராணுவம், சீன நாட்டினரை குறிவைத்து இன்று பலுசிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். பலுசிஸ்தானின் குவாதர் துறைமுக நகரத்தில் சீன பொறியாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது 4 சீனர்கள் மற்றும் 9 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக … Read more

கனடா கோவிலில் மீண்டும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கி நாசம்…!

சுர்ரே, கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சுர்ரே நகரில் பழமையான கோவில்களுள் ஒன்றான லக்ஷ்மி நாராயண் மந்திர் ஆலயம் உள்ளது. நேற்று (சனிக்கிழமை) இரவு அந்த கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கி நாசமாக்கி உள்ளனர். அதன்பின்னர் கோவிலின் கதவில் காலிஸ்தான் ஆதரவு போஸ்டர்களை ஒட்டிவிட்டு சென்றுள்ளனர். அதில் கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கு பங்கு உள்ளது, உடனடியாக கனடா அரசு இதுகுறித்து விசாரணை … Read more

சீன பொறியாளர்களுக்கு குறி… பாகிஸ்தானில் பயங்கரத் தாக்குதல்.. 2 தீவிரவாதிகள் பலி..

பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தில் சீனாவின் நிதியுதவியுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை துறைமுக பணிகளுக்காக 7 கான்வாய் வாகனங்களில் 23 சீனப் பொறியாளர்கள் சென்றுகொண்டிருந்தனர். அதனை குறிவைத்து பிரிவினைவாதக் குழுவான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் திடீரென தாக்குதல் நிகழ்த்தியது. காலை 9.30 மணியளவில் துவங்கிய இந்த தாக்குதல், சுமார் 2 மணி நேரம் வரை நடைபெற்றது. ராணுவத்தினரும் எதிர்தாக்குதலை நடத்தினர். குவாதர் நகரம் முழுவதும் வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தமும், துப்பாக்கி சுடும் … Read more

உறுதியான வலிமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – தைவான் துணை அதிபரின் அமெரிக்க பயணத்திற்கு சீனா கண்டனம்

பெய்ஜிங், சீனாவில் நடந்த உள்நாட்டு போரால் கடந்த 1949-ம் ஆண்டு தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தங்களது நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முனைப்பு காட்டுகிறது. அதன் ஒரு பகுதியாக தைவான் எல்லையில் அடிக்கடி போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தைவானுடன் வேறு எந்த நாடுகளும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்துள்ளது. ஆனால் அமெரிக்கா மட்டும் துவக்கம் முதலே தைவானுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகிறது. இந்த … Read more

ரஷியாவில் அரசு அதிகாரிகள் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்த தடை விதிப்பு

மாஸ்கோ, உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. உக்ரைன் மீதான ஆக்ரமிப்பை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷியாவிலிருந்து வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது. இருப்பினும் வேறு நாடுகளிலிருந்து ரஷியாவிற்கு ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேடு சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இதனிடையே ரஷிய மக்களால் பயன்படுத்தப்படும் ஆப்பிள் நிறுவன சாதனங்கள் மூலம் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ரஷியாவின் முக்கிய உள்நாட்டு … Read more

சிங்கப்பூர்: நட்சத்திர விடுதியில் போதை விருந்தில் கலந்து கொண்ட 49 பேர் கைது

சிங்கப்பூர், சிங்கப்பூரின் சுற்றுலா தலங்களின் ஒன்றான சென்டோசா தீவில் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகளுக்கு துப்பு கிடைத்தது. அதன்பேரில் அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது போதை பவுடர் பயன்படுத்திய 49 பேரை கைது செய்தனர். பின்னர் சிஎன்பி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். கைப்பற்றப்பட்ட பொருட்களில் எக்ஸ்டசி, கெட்டமைன் மற்றும் போதைப்பொருள் சாதனங்கள் ஆகியவை இருந்தன. கைது செய்யப்பட்ட 49 பேரும் 21 முதல் … Read more

Baloch Militants Target Chinese Engineers Convoy In Pak, Gunned Down | பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் மீது தாக்குதல்: பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வாகனத்தில் சென்ற சீனப் பொறியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தின் கீழ், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்தில் நடக்கும் பணியில் ஏராளமான சீனர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பகுதியில் சீன முதலீட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால், உள்ளூர் மக்களுக்கு எந்த பலனும் இல்லை எனக்கூறி அப்பகுதியில் போராட்டம் நடந்தது. அவ்வபோது, சீனர்கள் மீதும் தாக்குதல் சம்பவங்களும் … Read more