மது விற்ற நபர்களை பிடிக்க சென்ற தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் : கும்பலை பிடித்து அடித்து உதைத்த கிராம மக்கள் <!– மது விற்ற நபர்களை பிடிக்க சென்ற தலைமை காவலருக்கு கொலை மிர… –>

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த கும்பலுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அட்டுவம்பட்டி பகுதியில் ஜெய கிருஷ்ணன், சரவணகுமார், ராஜேஷ் கண்ணா ஆகிய மூவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அதனை தட்டிக் கேட்டுள்ளனர்.

அப்போது, இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதையடுத்து மது விற்பனை செய்து வந்த கும்பலை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த கொடைக்கானல் தலைமை காவலர் அவர்கள் மூவரையும் கைது செய்து அழைத்துச் சென்ற போது, அவர்கள் தலைமைக் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தலைமைக் காவலர் கொடுத்த புகாரின் பேரில், அவர்கள் மூவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.