dhanush:விவாகரத்தால் தனுஷை பற்றி வெளியான 'அந்த' உண்மை

தனுஷும், ஐஸ்வர்யாவும் காதல் திருமணம் செய்து 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். அவர்களின் பிரிவு மற்றவர்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது தான் என்று
தனுஷ்
, ஐஸ்வர்யாவின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

பிள்ளைகள் வளர்ந்த பிறகு பிரிந்துவிடலாம் என்று பேசி வைத்திருந்தார்கள் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த பிரிவால் தனுஷ் பற்றி ஒரு உண்மை தெரிய வந்திருக்கிறது.

அதாவது கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகளை யாரிடமும் சொல்ல மாட்டாராம் தனுஷ். என்ன பிரச்சனை வந்தாலும் அதை தன் அப்பா, அம்மாவிடம் கூட கூற மாட்டாராம்.

மேலும் தனுஷ் மனதில் என்ன ஓடுகிறது என்பதை நண்பர்களால் கூட கண்டுபிடிக்க முடியாதாம். வீட்டில் என்ன பிரச்சனையாக இருந்தாலும் வெளியே அமைதியாக இருந்துவிடுவாராம். தனுஷுக்கு இப்படி ஒரு அருமையான குணம் இருப்பது தெரியாமல் போய்விட்டதே என்கிறார்கள் ரசிகர்கள்.

தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். 10 ஆண்டுகள் கழித்து அண்ணன் படத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Dhanush:மகன் விவாகரத்து: தனுஷ் அப்பாவுக்கு குவியும் பாராட்டு
குடும்ப பிரச்சனையில் இருந்து கவனத்தை திசை திருப்ப தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் தனுஷ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.