மீண்டும் ஊரடங்கு… மாநில அரசு அதிரடி முடிவு!

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும் கேரளா, திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்த பாடில்லை.

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில்
திரிபுரா மாநில அரசு
மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இவற்றில் முக்கியமாக வரும் 20 ஆம் தேதி வரை (பிப்ரவரி 20 மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இதேபோன்று திரையரங்குகள், ஜிம்கள் 50 சதவீத பேருடன் இயங்க வேண்டும் என்றும், 50 சதவீதத்துடன் இரவு 10 மணி வரை உணவகங்கள் இயங்க அனுமதிக்கப்படும் எனவும் திரிபுரா அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் செம ஹேப்பி – முதல்வர் ஜாக்பாட் அறிவிப்பு!

அதேசமயம், அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்கள் வருகையுடன் செயல்பட வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் பின்பற்ற வேண்டும் எனவும் மாநில அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.