தூங்கிக்கொண்டிருந்த கணவனை மகனுடன் சேர்ந்து கொன்று 7-வது மாடியிலிருந்து வீசிய மனைவி! – நடந்தது என்ன?

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் வசித்து வந்தவர் சந்தான கிருஷ்ணன் சாஸ்திரி(53). இவர் சிட்பி எனப்படும் இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். அவரின் மகன் அர்விந்த். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஜியரிங் படித்தார். அவர் கனடாவில் சென்று மேம்படிப்பு படிக்க விரும்பினார். இதற்காக பணம் கொடுக்கும்படி அர்விந்த்தும் அவரது தாயார் ஜெய்ஷீலாவும் சாஸ்திரியிடம் கேட்டனர். ஆனால் சாஸ்திரி பணம் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் சாஸ்திரியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஜோடிக்க திட்டமிட்டனர். இதையடுத்து இருவரும் சேர்ந்து சாஸ்திரியை கொலை செய்து 7வது மாடியில் இருந்து கீழே தூக்கி போட்டனர். இது குறித்து இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி அப்துல் ஷேக் கூறுகையில், “அதிகாலை 4 மணிக்கு தாயும், மகனும் சேர்ந்து உறங்கிக்கொண்டிருந்த சாஸ்திரியை சரமாறியாக அடித்து உதைத்தனர்.

சந்தான கிருஷ்ணன்

அதோடு அவரின் தலையை மரகட்டிலில் பல முறை ஓங்கி அடித்தனர். மேலும் கையில் இருந்த நரம்பை வெட்டினர். பின்னர் இதனை தற்கொலையாக மாற்ற இருவரும் முடிவு செய்தனர். ஆனால் அடித்ததில் சாஸ்திரி உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் தங்களது முடிவை மாற்றிக்கொண்டு சாஸ்திரியை தாங்கள் வசித்த 7வது மாடியில் இருந்து கீழே தூக்கிப்போட்டனர். வீட்டில் தரையில் சிந்திய ரத்தக்கரையை துடைத்து துணியை வாஷிங் மெஷினில் போட்டனர். சாஸ்திரி கீழே விழுந்து கிடப்பதை பார்த்த கட்டட வாட்ச்மென் உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

நாங்கள் சென்ற போது தாயும், மகனும், தாங்கள் உறங்கிக்கொண்டிருந்த போது வெளியில் குதித்துவிட்டார் என்று எங்களிடம் தெரிவித்தனர். கையில் வெட்டு இருப்பது குறித்து கேட்டதற்கு முதலில் கையில் வெட்டிக்கொண்டு தற்கொலை செய்ய திட்டமிட்டு பின்னர் கீழே குதித்ததாக தெரிவித்தனர். வீட்டில் படுக்கை விரிப்புகள் அனைத்து அலங்கோலமாக கிடந்ததால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தியதை தொடர்ந்து இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர்” என்றார்.

Also Read: சென்னை: தாயை தகாத வார்தைகளால் திட்டிய தந்தை; சார்ஜர் வயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த மகன்!

மற்றொரு அதிகாரி இது குறித்து கூறுகையில், “ஜெய்ஷீலா தனது மகனின் படிப்புக்கு பணம் கொடுக்கும்படி சாஸ்திரியிடம் பல முறை கேட்டுள்ளார். ஆனால் சாஸ்திரி பணம் கொடுக்கவில்லை. சென்னையில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் சாஸ்திரி மும்பைக்கு இடமாறுதல் மூலம் வந்துள்ளார்” என்று தெரிவித்தார். தாய் மகன் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.