சிசிடிவி கேமராவில் பதிவான வெண்மை நிற மர்ம உருவம்.. "பேய்" என கிளப்பப்பட்ட வதந்தி – பீதியாகிக் கிடக்கும் மக்கள் <!– சிசிடிவி கேமராவில் பதிவான வெண்மை நிற மர்ம உருவம்.. &quot;பேய்&quot;… –>

புதுச்சேரியில் நள்ளிரவில் சிசிடிவி கேமராவில் வெள்ளை உருவம் ஒன்று அங்கு இங்கு உலவுவது போன்று பதிவாகி உள்ளது.

இதனை பார்த்த சிலர் இரவு நேரத்தில் பேய் உலவுவதாக தெரிவித்தனர். வில்லியனூர் அடுத்த பெரம்பை கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியில் திருட்டு சம்பவங்களை குறைக்க சிசிடிவியை பொருத்தி உள்ளனர்.

நேற்று அப்பகுதியில் பதிவாகி இருந்த கேமரா பதிவுகளை பார்த்தபோது கடந்த 4 ம் தேதி வெள்ளிக்கிழமை 1 மணியளவில் வெள்ளை உருவம் ஒன்று அங்கும் இங்கும் உலவுவது போன்று பதிவாகி உள்ளது. இதனை பார்த்த சிலர் இரவு நேரத்தில் பேய் உலவுவதாக தெரிவித்துள்ளனர். அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் சிலர் இறந்ததாகவும் அவர்கள்தான் ஆவியாக சுற்றுகின்றனர் என்றும் சிலர் வதந்தியைக் கிளப்பினர்.

சிசிடிவி கேமரா பதிவில் தெரிந்தது பேய் அல்ல என்றும் அது “இமேஜ் அலியாசிங்” ( Image aliasing) எனப்படும் புகைப்பட சிதைவு அல்லது புகைப்பட தகவலை பதிவு செய்ய கேமரா சென்சார் எடுத்துக்கொள்ளும் நேரம் ஆகியவற்றால் ஏற்படும் ஒருவித ஒளியியற் கண்மாயம் (Optical Illusion) எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கேமராவில் படிந்திருக்கும் தூசு (Dust) காரணமாக சில நேரங்களில் எதிர் திசையில் நடந்து செல்பவரின் பிரதிபலிப்பு இதுபோன்ற உருவங்களை தோற்றுவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.