`என் சகோதரர் ராகுல் காந்திக்காக உயிரையும் தியாகம் செய்வேன்!" -யோகிக்கு பிரியங்கா காந்தி பதில்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் இடையே மோதல் உள்ளதாகவும், அந்த மோதல் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையும் பிளவுபடுத்தி வருவதாகவும் கருத்து தெரிவித்தார். இந்த நிலையில் யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்குப் பிரியங்கா காந்தி பதிலடி கொடுக்கும் விதமாகத் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி – யோகி ஆதித்யநாத்

பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 20-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரியங்கா காந்தி, “என் சகோதரர் ராகுல் காந்தி எனக்காக உயிரையும் தியாகம் செய்வார். நானும் அவருக்காக என் உயிரை தியாகம் செய்வேன். எங்களுக்கு இடையில் எந்த விதமான மோதலும் கிடையாது. பாஜகவில் அவருக்கும்(யோகி) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு இடையே தான் மோதல் உள்ளது. அந்த மோதல் காரணமாகத் தான் இவர் இப்படிக் கூறுகிறார்” எனக் கூறினார்.

Also Read: “கடற்கரையில் பிகினி அணியலாம்; பள்ளிகளில் அல்ல!” – பிரியங்கா காந்திக்கு பெண் எம்.பி பதில்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.