வீழ்ச்சியடைந்து வரும் கொரோனா பரவல்.. கட்டுப்பாடுகளை மறு ஆய்வு செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் <!– வீழ்ச்சியடைந்து வரும் கொரோனா பரவல்.. கட்டுப்பாடுகளை மறு ஆ… –>

நாட்டில் கொரோனா பரவல் வீழ்ச்சியடைந்து வருவதால் கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்யவோ, திருத்தவோ, நீக்கவோ செய்யலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய நலவாழ்வுத்துறைச் செயலர் ராஜேஷ் பூசண் கடிதம் எழுதியுள்ளார். அதில் கொரோனா தொற்றுப் பரவல், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆகியவற்றை நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

சோதனை, தொடர்பு கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி, கொரோனா தடுப்புச் சூழலுக்கு ஏற்ற செயல்பாடுகள் ஆகிய ஐந்து உத்திகளை மாநிலங்கள் பின்பற்றலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.