உ.பியில் திருமண நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்த 13 பெண்கள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு <!– உ.பியில் திருமண நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்த 13 பெண்கள் க… –>

உத்தரபிரதேசம் மாநிலம் குஷி நகரில் திருமணத்திற்கான கொண்டாட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் விழுந்து 13 பேர் உயிரிழந்தனர்.

மேலும், இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெபுவா நவுராங்கியா பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது கிணற்று ஸ்லாப்பின் மீது ஒரே நேரத்தில் பலர் அமர்ந்திருந்ததால் பாரம் தாங்காமல் பலகை உடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், 13 பெண்கள் உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.