அந்தமான்: போர்ட் பிளையர் விமான நிலையம் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும்

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அந்தமான் போர்ட் பிளையர் விமான நிலையம், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு செவ்வாய் தொடங்கி வெள்ளிக்கிழமை வரை வாரத்தில் நான்கு நாட்கள் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கேற்றவாறு சுற்றுலாப் பயணிகள் பயணத் திட்டத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என அந்தமான் சுற்றுலா துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: காவி கொடி குறித்து சர்ச்சை பேச்சு: சட்டப்பேரவைக்குள் உறங்கி காங்., எம்.எல்.ஏ.க்கள் தர்ணா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.