தி.மு.க.,வின் கனவு பலிக்காது அ.தி.மு.க., செயலர் ஆவேசம்| Dinamalar

புதுச்சேரி, : தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்த தி.மு.க., அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து, புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.பழைய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கர், இணைச் செயலாளர் அன்பானந்தம் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி பேசியதாவது:தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தி.மு.க., அறிவித்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை. இது போன்ற பொய்யான அறிவிப்புகளை அ.தி.மு.க,.வின் முன்னணி தலைவர்கள் மக்களிடம் கொண்டு சென்றனர்.தி.மு.க., அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு அ.தி.மு.க.,வை அழித்துவிடலாம் என நினைக்கும் தி.மு.க., அரசின் கனவு பலிக்காது.இவ்வாறு அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் மாநில இணைச் செயலாளர்கள் கணேசன் ,திருநாவுக்கரசு, சின்னதுரை முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜாராமன், பெரியசாமி, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள், அன்பழகன், கருணாநிதி, கணேசன் உள்ளி்ட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.