நள்ளிரவில் ஜன்னல் கம்பியை வளைத்து சூப்பர் மார்கெட்டுக்குள் புகுந்து ரூ.3 லட்சம் திருடிய "மங்கி-கேப்" ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு.! <!– நள்ளிரவில் ஜன்னல் கம்பியை வளைத்து சூப்பர் மார்கெட்டுக்குள… –>

மன்னார்குடியில், தனியார் வங்கி மற்றும் கோவிலில் இருந்த பாதுகாவலர்களின் கண்ணில் படாமல், அருகில் உள்ள சூப்பர் மார்கெட்டுக்குள் நள்ளிரவில் புகுந்து 3 லட்ச ரூபாய் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். காந்தி சாலையில் உள்ள ஆனந்தம் சூப்பர் மார்கெட்டை காலை ஊழியர்கள் திறந்த போது கல்லா பெட்டியில் இருந்த 3 லட்ச ரூபாயும், சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்க் ஒன்றும் திருடு போயிருப்பது தெரியவந்தது. மற்றொரு ஹார்ட் டிஸ்கில் பதிவான சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, முதல் மாடியில் உள்ள ஜன்னல் கம்பியை வளைத்து, கடைக்குள் புகுந்த மர்ம நபர், கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடி அங்கிருந்த லேடீஸ் ஹேண்ட் பேக்கில் வைத்து எடுத்து சென்றது தெரியவந்தது.

மங்கி கேப்பால் அவன் முகத்தை மறைத்திருந்தாலும், சட்டை அணியாததால் மார்பில் பச்சை குத்தியிருந்ததை வைத்து போலீசார் அவனைத் தேடி வருகின்றனர்.

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.