மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா -ஜோதிகா..!யார் படத்தில் தெரியுமா ?

நடிகர்
சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர். ஆரம்ப காலகட்டத்தில் பல விமர்சனங்களை சந்தித்து பின்பு படிப்படியாக தன் திறன்களை மெருகேற்றி வெற்றி கண்டவர் சூர்யா. காக்க காக்க, கஜினி, ஆறு, வாரணம் ஆயிரம், அயன் போன்ற தொடர் வெற்றிகளினால் முன்னணி நடிகர்களின் வரிசையில் அமர்ந்தார்.

நடிப்பு மட்டுமில்லாமல் 2D என்கின்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பல தரமான படங்களையும் தயாரித்து வருகின்றார். சமீபத்தில் இவர் தயாரித்து நடித்த
ஜெய் பீம்
படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

என்ன சொன்னாலும் திருந்த மாட்டியா ஐஸ்வர்யா ?.ஐஸ்வர்யாவின் செயலால் கடுப்பான ரஜினி ..!

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்திருக்கும்
எதற்கும் துணிந்தவன்
படம் மார்ச் 10 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. இந்நினையில் சூர்யா மற்றும்
ஜோதிகா
பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

சூர்யா

இருவரும் காதலித்து வந்த பொது பல படங்களில் இணைந்து நடித்தனர். கடைசியாக இருவரும் 2006 ஆம் ஆண்டு வெளியான ஜில்லுனு ஒரு காதல் படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவருக்கும் திருமணம் ஆனா நிலையில் ஜோதிகா நடிப்பிலிருந்து சற்று விளகினார்.

சூர்யா

இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிகா மீண்டும் நடிக்க துவங்கியபோது சூர்யா தனது 2D நிறுவனம் சார்பாக அவரது படங்களை தயாரித்தார். இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சூர்யா இயக்குனர் பாலாவின் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் மூலம் மீண்டும் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த பல படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றதால் இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கப்போகிறார் என்ற செய்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வலிமை விமர்சனம்; அஜித் ரசிகர்களின் அட்டகாசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.