கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருத்தாசலம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியொன்றில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறையினர் அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்டதில், மாணவி பயிலும் பள்ளியிலுள்ள விலங்கியல் ஆசிரியர் சாமிநாதன் என்பவர் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.