விடிய விடிய உல்லாசம் விடிந்தபின் தப்பியோடிய காதலன்..போலீசார் அதிரடி நடவடிக்கை.!

காதலியுடன் ஊரை விட்டு ஓடிய வாலிபர் ஒருவர், அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அனாதையாக விட்டு விட்டு தப்பித்து சென்றுள்ளார்.

மதுரை மேலூர் பகுதியில் வசிக்கும் 18 வயதான பெண் ஒருவர், அதே பகுதியில் வசிக்கும் 26 வயதான வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த வாலிபரின் வீட்டில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஊரை விட்டு இருவரையும் ஜோடியாக அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்பிறகு அந்த வாலிபர் அந்த பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவரைத் தனியாக விட்டு விட்டு தப்பித்து ஓடியுள்ளார். அதன்பிறகு அந்தப் பெண் பல நாள் அலைந்து திரிந்து உடல் நிலை பாதிக்கப்பட்டு அந்த காதலனின் வீட்டிற்கு வந்து தேடியுள்ளார்.

இந்த நிலையில் அந்த இளைஞரின் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றி தலைமறைவாக உள்ள காதலனை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த இளைஞருக்கு உடந்தையாக இருந்த இரண்டு நண்பர்கள் உட்பட கைது 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.