மது போதையில் பெண்ணைத் தாக்கி தட்டிக் கேட்ட பொதுமக்களையும் சரமாரியாகத் தாக்கிய தலைமைக் காவலர்

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் சாதாரண உடையில் இருக்கும் தலைமைக் காவலர் ஒருவர் மது போதையில் பொதுமக்களைத் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கருங்கல்பாளையம் காவல் நிலைய முதல் நிலை காவலரான பாரதி என்பவர், இரவு சாதாரண உடையில் கடைத்தெருவில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது அங்கு இரண்டு சிறுவர்கள் சண்டையிட்டுக் கொண்டு இருந்துள்ளனர். மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் காவலர் பாரதி, “என் கண் முன்பே சண்டை போட்டுக் கொள்கிறீர்களா” என்று சிறுவன் ஒருவனின் சட்டையைப் பிடித்து மிரட்டினார் என்றும் அதனைத் தட்டிக் கேட்டதற்காக சிறுவனின் தாயை கடுமையாகத் தாக்கினார் என்றும் கூறப்படுகிறது.

பெண் ஒருவர் தாக்கப்படுவதைப் பார்த்த பொதுமக்கள் பாரதியைத் தட்டிக் கேட்கவே, அவர்களையும் அவர் தாக்கத் தொடங்கியுள்ளார்.

தகவலறிந்து வந்த மற்ற போலீசார், பாரதியை அங்கிருந்து சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.