தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கொரோனா தொற்றால் யாரும் பலியாகவில்லை -சுகாதாரத்துறை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தொற்றால் மரணங்கள் ஏதும் இல்லாத நிலை எட்டப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 112 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 327 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் ஆயிரத்து 461 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.