காதலிக்க மறுத்த சிறுமியை மிரட்டிய இளைஞர் கூட்டாளிகளுடன் போக்சோ சட்டத்தில் கைது

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் தன்னைக் காதலிக்க மறுத்த சிறுமியிடம் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞன் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டான்.

வாய்க்கால்ரோடு பகுதியைச் சேர்ந்த மௌலி ரஞ்சித் என்பவன், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரிடம் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளான். சிறுமி மறுக்கவே, சமூக வலைதளத்தில் இருந்து அவரது புகைப்படத்தை எடுத்து, ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் என மிரட்டியுள்ளான்.

சிறுமியை அச்சமூட்டுவதற்காக கத்தியுடன் தாம் இருக்கும் புகைப்படத்தையும் அவருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் மௌலி ரஞ்சித்தையும் அவனது செயலுக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் தௌபிக், தன்சீல் ஆகியோரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.