மனைவி மீது சந்தேகம்.. மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை..!

மனைவியை கொலை செய்து விடு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் . இவருக்கு திருமணமாகி வனஜா  என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். வெளிநாட்டில் வேலை செய்து வந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஊர் திரும்பினார்.

இந்நிலையில், மனைவியின் நடத்தை மீது அவருக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட ஏற்பட்ட தகராற்றில் அவர் மனைவியை குத்தி கொலை செய்துள்ளார்.

இதனை அவரது மகள் கண்டதால் அவரது மகள் வெளியே சென்று சொல்லிவிடுவார்களோ என பயந்து அவர்களை கொலை செய்ய முயன்றுள்ளார். குழந்தைகள் சத்தமிட்டதால் பயந்து போன அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

குழந்தைகளின் அழுகுரல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.