சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு நிறைவு..!!

சென்னை: சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு நிறைவுபெற்றது. அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த சந்திப்பில், நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் விலக்கு கோரும் மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முதலமைச்சர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.