காங்கிரஸை விட்டு வந்தாச்சு.. அடுத்து மமதா.. சத்ருகன் இனிமேலாவது சாதிப்பாரா?

ஒரு நேரத்தில் பாஜக அனுதாபி.. அடுத்து அங்கிருந்து கிளம்பி காங்கிரஸுக்கு வந்தார். இதோ இப்போது அங்கிருந்தும் வெளியேறி மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸில் சேரப் போகிறார்
சத்ருகன் சின்ஹா
.

சத்ருகன் சின்ஹாவை,
மமதா பானர்ஜி
கட்சிக்கு அழைத்து வந்ததே பிரஷாந்த் கிஷோர்தான். அவரது முயற்சியால்தான் சத்ருகன் சின்ஹா, தற்போது மீண்டும் ஒரு முறை கட்சி தாவியுள்ளார். இதுவரை எந்தக் கட்சியிலும் பெரிதாக சாதித்ததில்லை சத்ருகன் சின்ஹா. அவருக்கான பெரிய வாய்ப்புகளையும் எந்தக் கட்சியும் கொடுக்கவில்லை. இப்போது மமதா பானர்ஜி எந்த மாதிரி இவரை பயன்படுத்தப் போகிறார் என்று தெரியவில்லை.

திரினமூல் காங்கிரஸ்
கட்சியில் சேருவது குறித்து சத்ருகன் சின்ஹா கூறுகையில், மமதா பானர்ஜியுடன் இணைந்து செயல்படுவதை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். பெரிய கெளரவமாக உணர்கிறேன். அவரது கட்சிக்கு நான் தேவைப்பட்டதால் என்னை அழைத்துள்ளனர். அசன்சோல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்று அவர்கள் விரும்பி அழைத்துள்ளனர். நான் இங்கு வருவதில் எனது அண்ணன் யஷ்வந்த் சின்ஹா,
பிரஷாந்த் கிஷோர்
ஆகியோர் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.

பிரஷாந்த் கிஷோர் என்னைத் தொடர்பு கொண்டார். இதயப்பூர்வமாக இருவரும் பேசிக் கொண்டோம். நீண்ட நேரம் பேசினோம். பல பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். திரினமூலுக்கு வருமாறு அவர் அழைத்தார். சரியான பாதையை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நாம் சில தவறான பாதைகளை தேர்ந்தெடுக்க நேரிட்டு விடுகிறது என்றார் சத்ருகன் சின்ஹா.

பிரஷாந்த் கிஷோர்தான், மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலில் மமதா பானர்ஜிக்கு பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தவர் என்பது நினைவிருக்கலாம். தற்போது மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களை திரினமூலுக்கு இழுத்து வரும் வேலையை அவர் செய்து வருகிறார். 2024 லோக்சபா தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையில் மாபெரும் கூட்டணியை உருவாக்கவும் பிரஷாந்த் கிஷோர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.