துணை தாசில்தாரின் பெற்றோர் தற்கொலை| Dinamalar

துமகூரு : மதுகிரி துணை தாசில்தார் ஒருவரின் தந்தை, தாய் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.துமகூரு மதுகிரி துணை தாசில்தாராக பணியாற்றுபவர் சிவருத்ரய்யா. இவரது தந்தை சிவண்ணா, 78, தாய் சித்தலிங்கம்மா, 73, சிராவின் ஹாலேளஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தனர்.

தனியாக வசித்து வந்த இத்தம்பதி, இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை.சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் நேற்று காலை ஜன்னலை திறந்து பார்த்த போது, இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இவர்களின் தற்கொலைக்கு, கடன் சுமையே காரணம் என கூறப்படுகிறது. கள்ளம்பெள்ளா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.