தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – சித்தியடைந்த 9,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி

2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட அடிப்படையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தியடைந்த 9,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி வழங்கப்படவுள்ளது.

ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் அங்கத்தவராகவுள்ளவர்களின் பிள்ளைகளுக்கும் இப் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

15,000 ரூபாய் பெறுமதியான இப்புலமைப்பரிசிலைப் பொறுவதற்கான விண்ணப்ப படிவங்களை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைமைக் காரியாலயத்திலும் மற்றும் பிராந்திய காரியாலயத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.

மே மாதம் 30 ஆம் திகதி வரை விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்தி சமர்ப்பிக்க முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.