நீலகிரியில் சினிமா படபிடிப்பிற்கு தடை.!

கோடை விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களில் ஜூன் மாதம் வரை சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கபட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான உதகை மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறி கண்காட்சிகள் உள்ளிட்டவை இருக்கின்றன. இவற்றை நடத்துவதற்கு தேவையான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதனால் கோடை காலத்தில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், சுற்றுலா தளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாலும், உதகை தாவரவியல் பூங்கா குன்னூர் சிம்ஸ் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் நாளை முதல் ஜீன் மாதம் வரை சினிமா படப்பிடிப்பு நடத்த தோட்டக்கலை துறை தடை விதித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.