26 சுங்கச்சாவடி-களின் கட்டணம் அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

புதுடெல்லி:
26 சுங்கச்சாவடி-களின் கட்டணம் உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் வானகரம் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதையடுத்து நாடு முழுவதும் டோல்கேட் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் சுங்கச்சாவடிகளை அகற்ற கோரிக்கை விடுத்த நிலையில், அதே சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.