விரைவில் தேர்தல் நடத்த இம்ரான்கான் விருப்பம்| Dinamalar

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பார்லிமென்டை கலைக்குமாறு பாக்., பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு அதிபரை வலியுறுத்தியுள்ளார். முன்னதாக நடந்த பார்லி.,யில் கடும் அமளி ஏற்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த கட்சிகள், எதிர்க்கட்சிகளுடன் கை கோர்த்தன. இதனால், இம்ரான் கான் பெரும்பான்மை இழந்தார். இருப்பினும் பதவியில் இருந்து விலக மறுத்து , கடைசி வரை போராடுவேன் எனக்கூறியிருந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு இன்று நடப்பதாக இருந்தது. ஆனால் பார்லிமென்ட் கூடியதும் துணை சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி, அதனை நிராகரித்தார். தொடர்ந்து பார்லிமென்ட்டை ஏப்.,25க்கு ஒத்திவைத்தார்.

இதனை தொடர்ந்து இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்:
அரசுக்கு எதிரான சதியில் வெளிநாட்டிற்கு தொடர்பு உள்ளது. பாகிஸ்தான் பார்லிமென்ட்டை கலைக்க வேண்டும் என அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலுக்கு மக்கள் தயாராக வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.