இலங்கையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும் வரையில், தற்காலிகமாக 4 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே நிதியமைச்சர் பதவியில் இருந்த ராஜபக்சே குடும்ப உறுப்பினரான பசீல் ராஜபக்சேவுக்கு பதிலாக அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனேவும், வெளிவிவகாரத்துறை அமைச்சராக ஜீ.எல்.பீரிசும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட நான்கு பேரும் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
நிதியமைச்சகத்தின் செயலாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. .