ஆந்திராவில் உருவாக்கப்பட்ட 13 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிகளை நியமித்து ஆந்திர அரசு உத்தரவு.!

ஆந்திராவில் உருவாக்கப்பட்ட 13 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிகளை நியமித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில், அவற்றை பிரித்து புதிதாக 13 மாவட்டங்களை முதலமைச்சர் ஜெகன் மோகன் உருவாக்கினார். இதனால், ஆந்திர மாநிலத்தின் மொத்த மாவட்டங்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், திருப்பதி மாவட்ட ஆட்சியராக வெங்கடரமணா நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பதி மாநகராட்சி ஆணையராக இருந்த கிரிஷா புதிதாக அமைக்கப்பட்ட அன்னமய்யா மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சித்தூர் எஸ்பியாக ஒய்.ரிஷாந்த், திருப்பதி எஸ்பியாக பி.பரமேஷ்வர், திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக நரசிம்ம கிஷோர் உட்பட 26 மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.