திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெருமாள்மலை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், பெருமாள் மலை வளர் சட்டத்திற்குட்பட்ட துப்பாக்கி முனை பகுதியில் திடீரென ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 25 மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
செடி கொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து வருவதால் தனியார் தோட்டப் பகுதிகளில் வைக்கப்படும் தீ வனப்பகுதிகளிலும் பரவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.. வெயில் காலங்களில் இது போன்று அடிக்கடி காட்டு தீ ஏற்படுகிறது.கொட