“சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதில்லை”.. அரசுப்பேருந்துகளை சிறைப்பிடித்து மக்கள் மறியல்..!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே பேருந்துகள் சரியான நேரத்துக்கு இயக்கப்படாததை கண்டித்து தொண்டாமுத்தூர் – நரசிபுரம் சாலையில் அரசுப்பேருந்துகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செலம்பநல்லூர் பகுதியில் சரியான நேரத்துக்கு பேருந்துகள் வராததால், நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படாததாக கூறி மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். தகவல் அறிந்து வந்த போக்குவரத்து மண்டல மேலாளர் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தொண்டாமுத்தூர் – நரசிபுரம் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.