டெல்லி: தேசிய தூய்மை காற்று திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.233 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே தெரிவித்துள்ளார். சென்னைக்கு ரூ.181 கோடி, மதுரைக்கு ரூ.31 கோடி, திருச்சிக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.