பிரதமர் பதவியே போயிடுச்சு… இந்த பதவி எதுக்கு? -இம்ரான் கான் எடுத்த அதிரடி முடிவு!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தமது கட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததையடுத்து, பிரதமர் பதவியை
இம்ரான் கான்
இழக்க வேண்டியதானது. இதனை தொடர்ந்து தமது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ஊழல் வழக்குகள் உள்ளவரை பிரதமராக ( ஷபாஸ் ஷெரீப்) தேர்வு செய்திருப்பதைவிட நாட்டுக்கு மிகப் பெரிய அவமானம் வேறு எதுவும் இருக்க இயலாது. திருடர்களுடன் நாடாளுமன்றத்தில் ஒன்றாக அமரமாட்டேன்’ என்று இம்ரான் கான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இம்ரான் கானின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யும் முடிவை அவரது கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஷேக் ரஷீத் உறுதி செய்துள்ளார்.

இதனிடையே, பெஷாவரில் புதன்கிழமை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இம்ரான் கான், பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ள ஆட்சி மாற்றத்தில் தொடர்புடைய வெளிநாட்டு சதிக்கு எதிராக போராட வருமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பார் என அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.