சென்னையில் ரயில் மீது கற்களை வீசி கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்.!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் ரயில் மீது கற்களை வீசி எறிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களும், சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் சென்றுகொண்டிருந்த ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இரு ரயில்களும் ஒரே திசையில் சென்றுக்கொண்டிருந்த நிலையில் மாநில கல்லூரி மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறு செய்ததால், பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததாக கூறப்படும் நிலையில் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் நிறுத்தப்பட்டது.

அதன்பின், மாநில கல்லூரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்ற மின்சார ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் அந்த ரயிலும் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, இருத்தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்ட நிலையில், ரோந்து பணியில் இருந்த செம்பியம் போலீசார், இச்சம்பவம் தொடர்பாக 15 கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.